பாதுகாப்பு இடைவெளி தூதர்களை அவமதித்த 6 பேரிடம் விசாரணை

பாதுகாப்பு இடைவெளி தூதர்களை அவமதித்த 6 பேரிடம் விசாரணை

2 mins read
000539aa-75ab-4bb0-aaa4-3a4d106ba89e
கடைத்தொகுதி ஒன்றில்கடமையில் ஈடுபட்டிருக்கும் பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள். படம்: சாவ் பாவ் -

பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­களை அவமதித்த ஐந்து வெவ்­வேறு சம்­ப­வங்­கள் தொடர்­பில் ஆறு பேரி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­வ­தாக காவல்­துறை நேற்று தனது அறிக்­கை­யில் கூறி­யது.

அக்­டோ­பர் 13ஆம் தேதி கேன்­பெரா பிளாசா கடைத்­தொ­கு­திக்­குள் 51 வயது ஆட­வர் ஒரு­வர் நுழைய முயன்­றார். தடுப்­பூ­சிச் சான்­றி­தழை அவ­ரி­டம் பாது­காப்பு இடை­வெளி தூதர் கேட்­ட­போது தம்­மி­டம் கைபே­சியோ டிரேஸ்­டு­கெ­தர் சாத­னமோ இல்லை என்று கூறி­னார்.

தடுப்­பூசி போடா­த­வர்­க­ளுக்கு கடைத்­தொ­கு­தி­யில் நுழைய அனு­மதி இல்லை என்­னும் உத்­த­ரவு நடப்­பிற்கு வர அப்­போது ஒரு­வார கால அவ­கா­சம் இருந்­த­தால் அவரை அந்­தத் தூதர் கடைத்­தொ­கு­திக்­குள் செல்ல அனு­ம­தித்­தார். இனி­மேல் வரும்­போது தடுப்­பூ­சிச் சான்­றி­த­ழைக் காண்­பிக்க வேண்­டும் என்று அப்­போது அவர் கூறி­ய­போது ஆத்­தி­ர­ம­டைந்த ஆட­வர், அந்­தத் தூத­ரி­டம் வாக்கு­ வா­தத்­தில் ஈடு­பட்­டார். பின்­னர் தமது கைபேசி மூலம் தூத­ரைப் பட­மெ­டுக்க முயன்­றார்.

முகத்தை மறைக்க முயன்ற தூத­ரின் கையை ஆட­வர் தட்­டி­விட்­டார். அரசு ஊழி­ய­ரி­டம் மூர்க்­கத்­த­ன­மாக நடந்­து­கொண்­டது தொடர்­பான விசா­ர­ணைக்கு ஆட­வர் உதவி வரு­கி­றார் என்று காவல்­துறை கூறி­யுள்­ளது.

மற்­றொரு சம்­ப­வம் சைனா

­ட­வுன் பாய்ண்ட்­டில் நிகழ்ந்­தது. பாது­காப்பு இடை­வெ­ளித் தூத­ரின் முகக்­க­வ­சத்தை 57 வயது ஆட­வர் ஒரு­வர் கீேழ இறக்­கி­விட்­ட­தோடு அவ­ரைத் தள்­ளி­விட்­டார். தடுப்­பூசி போட்­ட­தற்­கான ஆவ­ணத்தை அவர் காட்­டா­த­தால் கடைத்­தொ­கு­திக்­குள் நுழைய தூதர் மறுத்­த­போது இச்­சம்­ப­வம் நடந்­தது. ஆட­வர் கைது செய்­யப்­பட்­டார்.

அக்­டோ­பர் 27ஆம் தேதி 43 வயது ஆட­வர் ஒரு­வர் புவாங்­காக் சதுக்­கத்­தி­னுள் நுழைய முயன்­ற­போது ெதாந்­த­ரவு தந்­த­தாக காவல்­து­றையை பாது­காப்பு இடை­வெளித் தூதர் அழைத்­தார். தூதரை நோக்கி தகாத வார்த்­தை­க­ளைப் பயன்­ப­டுத்­திய அவர் கைது செய்­யப்­பட்­டார்.

மூன்று நாள்­கள் கழித்து கேன்­பெரா பிளா­சா­வில் 30 வயது ஆட­வ­ரும் அவ­ரு­டன் இருந்த பெண்­ணும் பாது­காப்பு இடை­

வெ­ளித் தூதரை தகாத முறை­யில் தட்டி மோச­மாக நடத்­தி­யது தொடர்­பில் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

நவம்­பர் 3ஆம் தேதி பாய­

லே­பா­ரில் உள்ள சிங்­போஸ்ட் சென்­ட­ருக்­குள் நுழைய தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 68 வயது முதி­ய­வ­ருக்கு அனு­மதி மறுக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து பாது­காப்பு இடை­வெ­ளித் தூதரை அவர் அவ­ம­தித்­தார். அவ­ரி­ட­மும் காவல்­துறை விசா­ரணை நடத்தி வரு­கிறது.

பாது­காப்பு இடை­வெ­ளித் தூதர்­க­ளைப் புண்­ப­டுத்­தும் செயல்­கள் கடு­மை­யா­கக் கரு­தப்­படும் என்று காவல்­துறை எச்­ச­ரித்­துள்­ளது. அர­சாங்க ஊழி­யர்­களை அச்­சு­றுத்­தும், அவ­ம­திக்­கும், புண்­ப­டுத்­தும் செயல்­களில் ஈடு­

ப­டு­வோ­ருக்கு ஓராண்டு வரை­யி­லான சிறைத் தண்­ட­னை­யும் $5,000 வரை­யி­லான அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.