காவல்துறையின் பணிகளையும் குற்றச்செயல்களைத் தடுப்பதையும் வேடிக்கையான விளையாட்டுகள் மூலம் மாணவர்களுக்கு விளக்கும் திட்டம்.
முன்னோடித் திட்டமாக, கான் எங் செங் தொடக்கப்பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்ட 'போலிஸ் பால்' திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து செப்டம்பர் வரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தில் அப்பள்ளியின் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
காவல்துறையின் பணிகளையும் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுப் பதையும் இந்தத் திட்டம் வேடிக்கையான முறையில் போதிக்கிறது.
"இந்தத் திட்டத்தில் பங்கேற்காத மாணவர்களும் இது பற்றி கேட்டுத் தெரிந்துகொள்ள விரும்பினர்," என்று கான் எங் செங் தொடக்கப் பள்ளியின் ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியரான கே. கண்ணதாசன், 61 தெரிவித்தார்.
"சில வகுப்பு மாணவர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டதால் மற்ற மாணவர்கள் தாங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று வியப் படைந்தனர். அதே சமயத்தில் திட்டத்தில் பங்கேற்ற மாணவர்களும் விரும்பி செயல்பட்டனர்," என்றார் அவர்.
சிங்கப்பூர் விளையாட்டு மையத்தில் 'போலிஸ் பால்' திட்டம் நேற்று முன்தினம் காவல்துறையினரால் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உள்துறை, தேசிய வளர்ச்சி துணை அமைச்சர் டாக்டர் முகம்மது ஃபைசால் இப்ராஹிம் கலந்துகொண்டார்.
காவல்துறை உதவி ஆணையர் ஷிங் யூன் சின், கல்வி அமைச்சின் குணநலன், குடியுரிமை கல்விக் கிளையின் இயக்குநர் லோ வீ செங் ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.
'போலிஸ் பால்' திட்டத்தில் பங்கேற்க விரும்பும் பள்ளிகள் அருகில் உள்ள அக்கம்பக்க போலிஸ் நிலையத்தின் காவல்துறை சமூக அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளலாம். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை.
இந்தத் திட்டம், மூன்று நிலை களைக் கொண்டது. வெவ்வேறு கருப்பொருளைக் கொண்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்து அடுத்த நிலைக்கு மாணவர்கள் முன்னேற வேண்டும்.
முதல் நிலையில் காவல்துறையினரை மாணவர்களுக்கு அறி முகப்படுத்துகிறது. படம் வரைந்து, வண்ணம் தீட்டி தாளிலான வடிவத்தை இதில் பூர்த்தி செய்ய வேண்டும்.
இரண்டாவது நிலை, சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் காவல்துறையின் செயல்பாட்டை விவரிக்கிறது.
வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்தல், விளம்பரத் தட்டிகளை வடிவமைத்தல், கதையைப் படித்து வினாக் களுக்குப் பதிலளித்தல் போன்ற நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும். 3வது நிலை, காவல்துறையினர் சட்டம், ஒழுங்கை எவ்வாறு நிலைநாட்டுகின்றனர் என்பதை போதிக்கிறது.
குறுக்கெழுத்து, சொல் தேடல் போன்ற நட வடிக்கைகளின் மூலம் இது உணர்த்தப்படுகிறது.