பெண்ணை கையாண்டவிதம் குறித்து குறைகூறல், மறுப்பு

பெண்ணை கையாண்டவிதம் குறித்து குறைகூறல், மறுப்பு

2 mins read
90dc838e-f969-4637-a186-a03d79d83e01
-

அங் மோ கியோ ஹப்­பில் 55 வயது மதிக்கத்தக்க மாது ஒரு வரை தவ­றான முறை­யில் கை யாண்டதாகக் கூறப்படுவதை காவல்துறை மறுத்துள்ளது.

இது தொடர்பாக சமூக ஊட­கங்­களில் பர­வும் காணொ­ளிக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளி யிட்டனர். அதில் நடந்த சம்பவம் குறித்து விவரிக்கப்பட்டிருந்தது.

புதன்­கி­ழமை காலை 9.19 மணி­ய­ள­வில் மாது ஒருவர் முகக்­க­வ­சம் அணிய மறுத்­த­தாக புகார் வந்­த­தால் காவல்துறையினர் அங்கு சென்றனர்.

பேரங்­கா­டி­யில் ஊழி­யர் பல­முறை கூறி­யும் அந்த மாது முகக் கவ­சம் அணிய மறுத்ததாகக் கூறப்பட்டது. பேரங்­கா­டி­யில் அவர் சத்­தம் போட்­ட­தா­க­வும் தெரிவிக்கப் பட்டது.

இதை­ய­டுத்து அங் மோ கியோ பேருந்து நிலை­யத்­தில் அந்த மாதை அதிகாரிகள் அடை­யா­ளம் கண்­ட­னர். அப்போது முகக்­க­வ­சம் அணிய அவ­ரி­டம் அறி­ வுறுத்தப்­பட்­டது. ஆனால் முகக்­க­வ­சம் அணிய மறுத்­த­தோடு அவ­ருக்கு வழங்­கப்­பட்ட முகக் கவ­ச­கத்­தை­யும் ஏற்­றுக் கொள்ளவும் மறுத்து­விட்­டார். உரக்கக் கத்தி பேசிய அவர் அங்கிருந்து செல்ல முயற்சி செய்தார்.

இதனால் அதிகாரிகள் அவரை சுமார் 15 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினர். தனக்கும் தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்கும் முகக் கவசம் அணியாமல் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்ததால் அவரை கைது செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

ஆனால் இதற்குப் பணியாமல் எதிர்ப்பு தெரிவித்த மாது, உட்கார விரும்பினார். அதற்கும் அதி காரிகள் அனுமதியளித்தனர் என்று அறிக்கையில் சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.

அந்த மாது பின்னர் மனநலக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டார்.

இன்ஸ்டகிராமில் வெளியான காணொளியில் காவல்துறை அதிகாரிகள் நால்வர் சுற்றியிருந்த போது யாராவது உதவுங்கள் என்று அந்த மாது சத்தம் போடு வதும் நாங்கள் உதவ இருக்கிறோம் என்று ஒருவர் கூறுவதும் பதிவாகி யுள்ளது.

இந்தக் காணொளி அங் மோ கியோ பேருந்து நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொய்யானத் தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர்