111 தனிநபர் நடமாட்ட சாதன குற்றச்செயல்கள் அம்பலம்

111 தனிநபர் நடமாட்ட சாதன குற்றச்செயல்கள் அம்பலம்

2 mins read
03947613-4de5-4bcc-8698-7818edaf0246
நிலப் போக்கு வரத்து ஆணைய அதிகாரிகள் வெள்ளிக் கிழமை அதிகாலை 5.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிவரை தீவு முழுவதும் சோதனை நடத்தினார்கள். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்/ஃபேஸ்புக் -

வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிவரை சோதனை

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் கிறிஸ்­ம­சுக்கு முதல் நாளன்று நாடு முழு­வ­தும் சோதனை நடத்­தி­யது.

மோட்­டார் பொருத்­தப்­பட்ட நட­மாட்­டச் சாத­னங்­களை நடை­பா­தை­யில் ஓட்­டிச்சென்­றது போன்ற தனி­நபர் நட­மாட்­டச் சாத­னங்­கள் தொடர்­பான 111 குற்­றச் செயல்களை ஆணைய அதி­கா­ரி­கள் கண்­டு­பிடித்­த­னர்.

காவல்­துறை, தேசிய பூங்­காக் கழ­கம், நகர மறு­சீ­ர­மைப்பு ஆணை­யம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­களும் ஈடு­பட்ட அந்­தச் சோத­னை­ நட வடிக்கை வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 5.30 மணி முதல் சனிக்­கிழமை அதி­காலை 5.30 மணி வரை நடந்­தது. தனி­ந­பர் நட­மாட்டச் சாதனங் களை நடை­பா­தை­களில் ஓட்­டிச் செல்­லக்கூடாது என்று சென்ற ஆண்டு ஏப்­ரல் மாதம் தடை விதிக்­கப்­பட்­டது.

அதற்கு முன்­பாக, 2019ஆம் ஆண்­டில் இத்­த­கைய சாத­னங்­கள் சம்­பந்­தப்­பட்ட சுமார் 4,900 குற்­றச் செயல்­கள் நிகழ்ந்­தன. மின்ஸ்­கூட்­டர்­களை நடை­பா­தை­களில் ஓட்­டிச் செல்­லக்­கூ­டாது என்று 2019ஆம் ஆண்டு நவம்­ப­ரில் தடை விதிக்­கப்­பட்­டது.

இந்த ஆணை­யத்­தின் அதி­காரி­கள் கடந்த புதன்­கி­ழ­மை­யும் வெள்­ளிக்­கி­ழ­மை­யும் வாக­னம் தொடர்­பி­லான 215 குற்­றச்­செ­யல்­களைக் கண்­டு­பி­டித்­தன.

புகைபோக்­கிச் சாத­னங்­கள், பதிவு எண் தகடு தொடர்­பி­லான திருத்­தங்­கள் அந்­தக் குற்­றச்­செயல்­களில் அடங்­கும். 10 நட­மாட்­டச் சாத­னங்­களும் ஆறு வாக­னங்­களும் பறி­மு­தல் செய்­யப்­பட்டதாக ஆணை­யம் நேற்று தெரி­வித்­தது.

விதி­மு­றை­க­ளை­யும் வழி­காட்டி மு­றை­க­ளை­யும் பின்­பற்றி நடந்து­கொள்­ளு­மாறு பொது­மக்­க­ளுக்கு ஆணை­யம் நினை­வூட்­டி­யது.

சிங்­கப்­பூ­ரில் வரும் ஜன­வரி 1ஆம் தேதி முதல் புதிய விதி­கள் நடப்­புக்கு வரு­கின்­றன. சாலை­களில் சேர்ந்து சைக்­கி­ளோட்­டிச் செல்ல அந்த விதி­மு­றை­கள் வரம்பு­களை விதிக்­கின்­றன.

போக்­கு­வ­ரத்து விதி­மு­றை­களை மீறும் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு ஜன­வரி 1 முதல் அப­ரா­தம் இரண்டு மடங்­கா­கும்.

கடும் குற்­றச்­செ­யல்­களில் ஈடு­படும் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு முதல் தடவை குற்­றம் செய்­தி­ருந்­தால் $1,000 வரை அப­ரா­தம், மூன்று மாதம் வரை சிறைத்­தண்­டனை உண்டு. மறு­ப­டி­யும் குற்­றம் செய்­வோருக்கு $2,000 வரை அப­ரா­தம் மற்­றும் அல்­லது ஆறு மாதம் வரை சிறை விதிக்­கப்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூ­ரில் சாலை­களில் சென்ற ஆண்­டில் சைக்­கிள் சம்­பந்­தப்­பட்ட 597 குற்­றச் செயல்­கள் நிகழ்ந்­தன. 2019ல் இவற்­றின் எண்­ணிக்கை 1,302 ஆக இருந்­தது என்று போக்­கு­வ­ரத்து காவல்துறை கூறி­யது.

இந்த ஆண்டு தொடக்­கம் முதல் 500க்கும் மேற்­பட்ட சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு எதி­ராக அம­லாக்க நட­வடிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு இருக்­கிறது என்று கடந்த அக்­டோ­பர் மாதம் போக்­கு­வ­ரத்து மூத்த துணை அமைச்­சர் சீ ஹொங் டாட் தெரிவித்தார்.