இளஞ்சிவப்பு நாடா பெருநடையில் அமைச்சர் இந்திராணி ராஜா

இளஞ்சிவப்பு நாடா பெருநடையில் அமைச்சர் இந்திராணி ராஜா

1 mins read
8298469f-4e83-4b5c-b238-702d9a535289
பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா (இடமிருந்து 2வது), மற்றவர்களுடன் சேர்ந்து இளஞ்சிவப்பு நாடா பெருநடையில் நேற்று கலந்துகொண்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மார்­ப­கப் புற்­று­நோய் அற­நி­று­வ­னம் ஏற்­பாட்­டில் நேற்று இளஞ்­சி­வப்பு நாடா பெரு­நடை 2021 நிகழ்ச்சி நடந்­தது. பிர­த­மர் அலு­வ­லக அமைச்­சர் இந்­தி­ராணி ராஜா அந்த 13 கி.மீ. பெரு­ந­டை­யில் கலந்­து­கொண்­டார்.

மரினா பே சேண்ட்­சில் இருந்து ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா வரை இடம்­பெற்ற அந்­தப் பெரு­நடை நிகழ்ச்சி மூலம் மார்­ப­கப் புற்­று­நோய் பற்­றிய விழிப்பு­ணர்வை மேம்­ப­டுத்­து­வது இலக்கு.

அந்­தப் பெரு­நடை நிகழ்ச்சி டிசம்­பர் 31ஆம் தேதி­யு­டன் முடி­வடை­கிறது. இது­வரை ஏறத்­தாழ 1,780 பேர் அதில் கலந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.

இதன்­மூ­லம் கிடைக்­கும் நிதி, இந்த அற­நி­று­வ­னத்­தின் செயல்­திட்­டங்­க­ளுக்­கும் சேவை­க­ளுக்­கும் உறு­து­ணை­யாக இருக்­கும்.

சின் மிங் பகு­தி­யில் உரு­வா­கும் புதிய மார்­ப­கப் புற்­று­நோய் நிலை­யத்­திற்­கும் அந்­தத் தொகை உத­வும்.

குமாரி இந்­தி­ராணி ராஜா­வின் சகோ­தரி 1990களில் மார்­ப­கப் புற்று­நோய் கார­ண­மாக மர­ண­ம­டைந்­து­விட்­டார். அப்­போது அந்த நோய் பற்­றிய புரிந்­து­ணர்வு அவ்­வ­ள­வாக இல்லை.

"இளம் வய­தில் நோய்­க­ளைப் பற்றி அவ்­வ­ள­வாக யாரும் சிந்­திப்­ப­தில்லை. உங்­களில் யாருக்­கா­வது அல்­லது உங்­கள் அன்­பர்­களில் யாருக்­கா­வது அத்­த­கைய நிலை ஏற்­பாட்­டால் மட்­டுமே அது பற்­றிய சிந்­தனை அதி­க­ரிக்­கும்.

"ஆகை­யால் இந்த நோய் பற்­றிய புரிந்­து­ணர்வை மேம்­ப­டுத்­த­வேண்­டி­யது என்னை பொறுத்­த­வரை முக்­கி­ய­மா­ன­தாக தெரிகிறது," என்று அமைச்சர் கூறி­னார்.