பிள்ளைகளின் மனத்திறன் வளர்ச்சியை ஆராய ஆய்வு

பிள்ளைகளின் மனத்திறன் வளர்ச்சியை ஆராய ஆய்வு

1 mins read
034b6701-e688-457f-a8e1-9914e38f17ef
-

பிள்­ளை­க­ளி­டம் மன வளர்ச்சி, மனத்­தி­றன், நினை­வாற்­றல், உணர்ந்­த­றி­தல் முத­லா­ன­வற்­றின் வளர்ச்­சியை ஆராய்­வ­தற்­காக ஒரு புதிய ஆய்வு நடத்­தப்­படு கிறது.

முதல் நான்கு ஆண்­டு­களில் பிள்ளைகளி­டம் காணப்­படும் மன வளர்ச்சியை ஆய்வு கண்­ட­றி­யும் என்று தெரிவிக்கப்பட்டது.

பள்­ளிக்­கூ­டங்­களில் படிப்­பில் வெற்­றி­பெறத் தேவைப்­படும் தேர்ச்­சி­கள், ஆற்­றல்­கள் பிள்­ளை­களிடம் எப்­படி மேம்­படுகின்­றன என்­பது ஆய்வு மூலம் தெரி­ய­வ­ரும்.

காலப்போக்­கில் அத்­த­கைய திற­மை­கள் எப்­படி வளர்ச்சி அடை­கின்­றன;

தவ­ழும் குழந்தைகளிடம், சிறாரி­டம் அவை எப்­படி மாறுபடு கின்­றன என்­பனவற்றை கண்டு பிடிப்­பது அந்த ஆய்­வின் நோக்கம் என்று தெரி­விக்­கப்­பட்டது.

கல்வி அமைச்­சின் மானி­யத்­து­டன் அந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­படுகிறது. மானியம் சென்ற ஆண்டில் கொடுக்கப்பட்டது.

தேசிய கல்­விக் கழ­கம், சிங்­ஹெல்த் பல­துறை மருந்­தகங்­கள் இரண்­டுக்­கும் இடைப்­பட்ட முதல் முயற்­சி­யாக இடம்பெறும் அந்த ஆய்­வில் ஏறக்­கு­றைய 1,000 பிள்ளை­களை உள்­ள­டக்­கு­வது இலக்கு என்று தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.

ஆய்­வுக்­காக செப்டம்­பர் முதல் குடும்­பங்­கள் சேர்க்­கப்­பட்டு வரு­கின்­றன. இது­வரை 200 சிறார்­பதிந்­து­கொண்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.