கட்டுமான நிறுவனங்களுக்கு அவற்றின் கட்டுமான பொறுப்பு
களிலிருந்து கூடுதலாக இரண்டு மாத நிவாரணம் வழங்கப்படுகிறது. இது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாகப் பல கட்டுமானப் பணிகள் தாமதம் அடைந்துள்ளன.
ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்துத் தரப்புகளும் ஊழியர்
களின் சம்பளம் தவிர்த்து கூடுதல் செலவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கான காலகட்டமும் நீட்டிக்கப்படும்.
இதற்கிடையே, வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்க ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட கூடுதல் ஒப்பந்தத் தொகைக்கு விண்ணப்பிக்க உதவும் நிவாரணக் கட்டமைப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
இந்த நீட்டிப்புகள் நிலச் சொத்து, சுற்றுப்புறச் சேவைகள், பாதுகாப்பு ஆகிய பிரிவுகளுக்கும் வழங்கப்
படுகிறது.
சட்ட, அமலாக்க நடவடிக்கை
களுக்கும் செலவுகளைப் பகிர்ந்துகொள்வதற்குமான நிவாரணக் காலகட்டம் இதற்கு முன்பு கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இம்மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
எதிர்பாராத நிகழ்வுகள் இல்லை என்றால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரையிலான நீட்டிப்பு இறுதியானதாக இருக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று கூறியது.
"இந்த இறுதி நீட்டிப்பைப் பயன்
படுத்தி முன்னோக்கிச் செல்லும் நோக்குடன் நீடித்த நிலைத்தன்மைமிக்க நடவடிக்கைகளுக்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் காண வேண்டும் என ஊக்குவிக்கிறோம்," என்று அமைச்சு கேட்டுக்கொண்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலையால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள், தற்போது படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சில நிறுவனங்கள் தொடர்ந்து சவால்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.
ஊழியர் பற்றாக்குறை, அதிகரித்துள்ள செலவுகள் ஆகியவற்றால் சில நிறுவனங்கள் சிரமப்
படுவதாக அறியப்படுகிறது.

