10 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது

10 ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது

2 mins read
ded3026a-e21e-48bd-99cf-24e2e9249d16
-

ஓமிக்­ரான் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்­கும் நோக்­கில் பத்து ஆப்­பி­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு சிங்­கப்­பூர் வர, சிங்கப்பூர் வழியாக வேறு நாடு­க­ளுக்­குச் செல்ல தடை விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது அந்­தத் தடை நீக்­கப்­பட்­டுள்­ளது.

இனி போட்ஸ்­வானா, எஸ்­வாட்­டினி, கானா, லெசோத்தோ, மலாவி, மொசாம்­பிக், நமி­பியா, நைஜீ­ரியா, தென்­னாப்­பி­ரிக்கா, ஸிம்­பாப்வே ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வர­லாம் அல்­லது இங்­கி­ருந்து வேறு நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­லாம்.

இந்த நாடு­க­ளுக்­குக் கடந்த 14 நாட்­களில் பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தோ­ரும் இனி சிங்­கப்­பூ­ருக்­குள் வர அனு­ம­திக்­கப்­ப­டு­வர். அவர்­கள் இங்­கி­ருந்து வேறு நாடு­க­ளுக்­கும் பய­ணம் செய்­ய­லாம்.

மேல் குறிப்­பி­டப்­பட்ட பத்து ஆப்­பி­ரிக்க நாடு­களில் ஓமிக்­ரான் பாதிப்பு அதி­க­ரித்­ததை அடுத்து, அண்­மை­யில் அங்கு பய­ணம் மேற்­கொண்ட நீண்­ட­கால குடி­நு­ழைவு அட்டை வைத்­தி­ருப்­போ­ரும் குறு­கிய கால குடி­நு­ழைவு அனு­மதி கொண்­டோ­ரும் நான்கு வாரங்­க­ளுக்­குச் சிங்­கப்­பூ­ருக்கு வர முடி­யாது அல்­லது இங்­கி­ருந்து வேறு நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்ள முடி­யாது என்­றும் சுகா­தார அமைச்சு அறி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், ஓமிக்­ரான் கிருமி உல­கெங்­கும் பர­வி­யுள்­ள­தால் இந்த 10 ஆப்­பி­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்­கான தடை நீக்­கப்­பட்­டுள்­ள­தாக அமைச்சு

கூறி­யது.

இந்த நாடு­க­ளி­லி­ருந்து வரும் பய­ணி­கள் எல்­லைப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ ப­டு­வர்.

"உல­க­ளா­விய நிலை மாறி வரு­கிறது. கொவிட்-19 கிரு­மித்­தொற்றை மீள்­தி­ற­னு­டன் எதிர்­கொள்­ளும் நாடா­கத் திகழ நாம் இலக்கு கொண்­டுள்­ளோம். அதன்­படி மாறி வரும் சூழ­லுக்கு ஏற்ப நமது எல்­லைக் கட்­டு­பா­டு­கள் மாற்றி அமைக்­கப்­படும்," என்று சுகா­தார அமைச்சு கூறி­யது.

ஆக அண்­மைய எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் குறித்து தெரிந்­து­கொள்ள சேஃப்டி­ரா­வல் இணை­யப்­பக்­கத்­துக்­குச் சென்று பார்க்­கும்­படி பய­ணி­கள் கேட்­டுக்­

கொள்­ளப்­ப­டு­கின்­ற­னர்.