ஓமிக்ரான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் இன்று முதல் வீட்டிலிருந்து அல்லது சமூகப் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவ மனைகளில் குணமடையலாம்.
இதற்கு முன்பு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பெரியவர்களும் 12 வயதுக்குக் குறைவான சிறுவர்களும் 10 நாட்களில் விடுவிக்கப்படுவர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் 14 நாட்களுக்கு குண
மடையும் திட்டத்தின்கீழ் இருக்க வேண்டும்.
அறிகுறிகள் இல்லாது ஆரோக்கியமாக இருந்தும் ஓமிக்ரான் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சுயமாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மூன்று நாட்கள் கழித்து அவர்கள் வழக்கநிலைக்குத் திரும்பலாம்.

