பாதுகாவல் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு புதிய செயலி

பாதுகாவல் அதிகாரிகளின் பாதுகாப்புக்கு புதிய செயலி

2 mins read
e4d406af-9be3-41de-8c96-4845594e68d7
பாதுகாவல் அதிகாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் வேலையிடப் பிரச்சினைகளை எளிதாக பதிவு செய்ய பாதுகாவல் ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள புதிய செயலி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஐவரில் இரண்டு அதிகாரிகள் திட்டப்பட்டனர் அல்லது தாக்கப்பட்டனர்: ஆய்வு

பாது­காப்பு அதி­கா­ரி­கள் வேலை­ யி­டத்­தில் எதிர்­நோக்­கும் பிரச்­சி­னை­கள் குறித்து புகார் அளிப்­ப­தற்­காக புதிய கைப்­பேசிச் செயலி ஒன்று அறி­மு­கம் செய்­யப்­பட்­டுள்­ளது.

தனி­யார் பாது­கா­வல் அதி­கா­ரி­க­ளின் நலன் குறித்த ஆய்வு முடி­வு­கள் வெளி­யிட்­ட­போது இந்தச் ­செ­ய­லி­யும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

இரண்டு பாது­கா­வல் அதி­கா­ரி­களில் ஒரு­வர், வேலை­யி­டத்­தில் பதற்­றம் அல்­லது மன­அ­ழுத்­தத்­துக்கு ஆளா­வ­தாக ஆய்­வின் முடி­வு­கள் தெரி­விக்­கின்­றன.

செய­லியை அறி­மு­கப்­ப­டுத்­திய 'யுஎஸ்இ' எனும் பாது­கா­வல் ஊழி­யர்­கள் சங்­கம், வேலை தொடர்­பான எந்­தப் பிரச்­சி­னை­யை­யும் எந்த நேரத்­தி­லும் எங்­கி­ருந்­தும் ஊழியர் புகார் அளிக்­க­லாம் என்று கூறி­யுள்­ளது.

தாங்­கள் முறை­கே­டாக நடத்­து­வது குறித்து எங்கு யாரி­டம் தொடர்­பு­கொண்டு உதவி கேட்­பது என்­பதை பாது­கா­வல் அதி­கா­ரி­கள் ெதரிந்து வைத்­துள்­ள­னர். இருந்­தா­லும் நடு­நி­லை­யான 3ஆம் தரப்பு விசா­ர­ணை­கள் உட்­பட மேலும் பல­வற்றை செய்து மேம்­ப­டுத்த வாய்ப்­புள்­ளது என்று யுஎஸ்­இ­யும் தேசிய தொழிற்­சங்­க காங்­கி­ர­சும் நேற்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தெரி­வித்­தன.

கைப்­பேசி செய­லி­யில் முன் ­பதிவு செய்­த­வர்­கள், சம்­ப­வம் அல்­லது பிரச்­சி­னை, இடம், புகைப்­ப­டம் போன்ற விவ­ரங்­க­ளு­டன் புகார் செய்ய முடி­யும். அப்­படி பதிவு செய்­யப்­பட்ட புகார்­கள் சம­ரச சேவைக்கு அனுப்பி வைக்­கப்­படும்.

தற்­போது சம­ரச நிலை­யத்­துக்கு நேரில் வந்து அல்­லது மின்­அஞ்­சல் வழி­யாக அதி­கா­ரி­கள் புகார் தெரி­விக்­கின்­ற­னர். இத­னால் புதிய செயலி பேரு­த­வி­யாக இருக்­கும் என்று யுஎஸ்­இ­யின் நிர்­வா­கச் செய­லா­ள­ரான ஸ்டீவ் டான் குறிப்­பிட்­டார்.

பணி­யில் இருக்­கும்­போது மின்­அஞ்­சல் வழி­யாக புகார் தெரி­விப்­பது சிர­ம­மாக இருப்­ப­தாக அதி­கா­ரி­கள் பலர் கூறி­ய­தால் செயலி உரு­வாக்­கப்­பட்­டது என்­றார் அவர்.

"யாரா­வது திட்­டி­னாலோ அல்­லது சம்­ப­வத்­தையோ செயலி வழி­யாக உட­ன­டி­யாக தெரி­விக்­க­லாம். நீங்­கள் எங்கு இருக்­கி­றீர்­கள் என்­பது எங்­க­ளுக்­குத் தெரிந்­து­வி­டும்," என்று திரு டான் சொன்­னார்.

புதிய செயலி மூலம் சிங்­கப்­பூ­ரில் உள்ள 40,000 அதி­கா­ரி­களை நேர­டி­யாகத் தொடர்பு கொள்ள முடி­யும் என்று யுஎஸ்இ நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

பாது­கா­வல் அதி­கா­ரி­கள் மன நலன், தவ­றாக நடத்­து­வது உள்­ளிட்­டவை தொடர்ந்து கவ­லை­ய­ளிக்­கும் அம்­ச­மாக இருந்து வரு­வதை யுஎஸ்இ மற்­றும் சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக் கழ­கம் நடத்­திய ஆய்வு தெரி­விக்­கிறது. இந்த ஆய்வு ஜூலை முதல் செப்­டம்­பர் வரை நடத்­தப்­பட்­டது.

ஏறக்­கு­றைய ஐவ­ரில் இரண்டு பேர், பணி­யில் இருக்­கும்­போது திட்­டப்­பட்­ட­தா­கவோ, தாக்­கப்­பட்ட தாகவோ தெரி­வித்­துள்­ள­னர். இது, அன்­றாட நடக்­கும் பிரச்­சி­னை­யாக வும் உரு­வாகி வரு­கிறது.

பெரும்­பா­லான சம்­ப­வங்­களில் மூத்த அதி­கா­ரி­களே பாதிக்­கப் பட்­டுள்­ள­னர்.

ஆய்­வில் ஆயி­ரம் அதி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.