பாலியல் வன்முறை; இளையருக்கு சிறை, பிரம்படி

பாலியல் வன்முறை; இளையருக்கு சிறை, பிரம்படி

2 mins read
a90b166e-2b21-44e5-8f15-5b9ae1bef62e
-

சிறு­மி­க­ளி­டம் பாலி­யல் உறவு குறித்து விசா­ரிக்­கப்­பட்டு வந்த நிலை­யில் 17 பெண்­ணி­ட­மும் இளை­யர் பாலி­யல் வன்­மு­றை­யில் ஈடு­பட்­டுள்­ளார்.

சிங்­கப்­பூ­ர­ரான 23 வயது அமர் பக்­டி­யர் முஹ­மட் அலி நேற்று தம் மீது சுமத்­தப்­பட்ட பாலி­யல் வன்­முறை, வயது குறைந்த சிறுமி களி­டம் பாலி­யல் உறவு கொண்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார்.

அவ­ருக்கு மொத்­தம் ஆறு ஆண்­டு­கள், பத்து மாதங்­கள் சிறைத் தண்­ட­னை­யும் மூன்று பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

இவர் மீதான இதர ஐந்து குற்­றச்­சாட்­டு­க­ளை­யும் நீதி­பதி தண்­டனை விதிக்­கப்­ப­டும்­போது கவ­னத்­தில் எடுத்­துக்­கொண்­டார். 2016ல் நடந்த சம்­ப­வத்­தில் 12 வயது சிறு­மியை வீடியோ விளை­யாட்டு விளை­யா­டு­வ­தற்­காக ஜூரோங் வெஸ்ட்­டில் உள்ள தனது வீட்­டுக்கு அவர் அழைத்­தி­ருந்­தார். ஆனால் அந்­தச் சிறுமி யிடம் தனது ஆசை­யைத் தீர்த்­துக் கொள்­வ­து­தான் இளை­ய­ரின் நோக்­க­மாக இருந்­தது என்று நீதி­மன்­றத்­தில் பேசிய அரசு தரப்பு வழக்­க­றி­ஞர் கிளைர் போ தெரி­வித்­தார். இரு­வ­ரும் வீட்­டுக்­குச் சென்­ற­னர். சிறு­மியை அமர் தனது அறைக்கு இட்­டுச் சென்­றார். அங்கு இரு­வ­ரும் பாது­காப்­பற்ற உட­லு­ற­வில் ஈடு­பட்­ட­னர்.

2017ல் இந்­தச் சம்­ப­வம் குறித்து ஆலோ­ச­க­ரி­டம் சிறுமி தெரி­வித்­த­தால் காவல்­து­றைக்கு தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

இதை­ய­டுத்து வேறு ஒரு சிறுமி உள்­ளிட்ட விவ­கா­ரம் தொடர்­பி­லும் அமர் விசா­ரிக்­கப்­பட்டு வந்­தார். இந்த நிலை­யில் 2018 ஜூலை 8ஆம் தேதி நடந்த சம்­ப­வத்­தில் சமூக ஊட­கம் வழி­யாக அறி­மு­க­மான 17 வயது பெண்ணை வீட்­டுக்கு வரச் சொன்­னார். அந்­தப் பெண்­ணி­ட­மும் அமர் தனது ஆசை­யைத் தீர்த்­துக் கொள்ள விரும்­பி­ய­தாக வழக்­க­றி­ஞர் கிளைர் போ கூறி­னார்.

வீட்­டில் அந்­தப் பெண்­ணின் அனு­ம­தி­யின்றி வலுக்­கட்­டா­ய­மாக பாலி­யல் உற­வில் ஈடு­பட அமர் முயற்சி செய்­தார். ஆனால் அந்­தப் பெண் அமரை தள்­ளி­விட்­டார். அதே நாளில் காவல்­து­றை­யி­டம் பெண் புகார் அளித்­தார்.