மசெகவின் முன்னோடி எம்பி. புவா பா லீ காலமானார்

மசெகவின் முன்னோடி எம்பி. புவா பா லீ காலமானார்

3 mins read
ccfc8d70-d65b-452f-ba7f-dad28473d234
சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற மக்கள் செயல் கட்சியின் மாநாட்டுக்கு வந்திருந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு புவா பா லீயுடன் தம்படம் எடுத்துக்கொண்டார் பிரதமர் லீ சியன் லூங் (வலது). ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

சுதந்­தி­ரத்­துக்­குப் பிந்­திய காலத்­தில் சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு அமைப்­பு­கள் உரு­வா­வ­தற்கு முக்­கிய தூணாக இருந்­த­வர் என்று கரு­தப்­பட்ட மக்­கள் செயல் கட்­சி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு புவா பா லீ நேற்று முன்­தி­னம் கால­மா­னார். அவ­ருக்கு வயது 89.

திரு புவா, 1968ஆம் ஆண்­டில் தெம்­ப­னிஸ் தொகு­தி­யின் நாடாளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெடுக்­கப்­பட்­டார். அதே ஆண்­டில் திரு புவா, தொடர்பு அமைச்­சின் நாடாளு­மன்­றச் செய­லா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டார்.

1971ல், திரு புவா தற்­காப்பு அமைச்­சின் மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ள­ரா­கப் பதவி உயர்வு பெற்­றார். அவர் அந்­தப் பொறுப்­பில் 1988 வரை நீடித்து, அர­சி­ய­லி­ல்­இருந்து ஓய்வு பெற்­றார்.

1932ஆம் ஆண்­டில் பிறந்த திரு புவா, 1959ஆம் ஆண்­டில் நன்­யாங் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பட்­டம் பெற்று, 1960ல் பொதுச் சேவை­யில் சேர்ந்­தார். எட்டு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு அவர் அர­சி­ய­லுக்­குத் தேர்வு செய்­யப்­பட்­டார்.

இரு­பது ஆண்டு அர­சி­யல் வாழ்க்­கை­யில் திரு புவா, முக்­கிய அர­சி­யல் தலை­வர்­களில் ஒரு­வ­ரான காலஞ்­சென்ற முன்­னாள் துணைப் பிர­த­மர் கோ கெங் சுவீ­யு­டன் அணுக்­க­மா­கப் பணி­யாற்­றி­யுள்­ளார்.

திரு கோவு­டன் சேர்ந்து வெவ்­வேறு வகை­யான அமைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்கு திரு புவா உத­வி­யுள்­ளார்.

உதா­ர­ணத்­துக்கு, 1972ல் உரு­வாக்­கப்­பட்ட சாஃப்ரா எனும் சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை போர்க்­கா­லப் படை வீரர்­கள் சங்­கத்­தின் முதல் தலை­வ­ராக 1972 முதல் 1989 வரை பதவி வகித்­தார்.

திரு புவா விளை­யாட்­டி­லும் கலை­யி­லும் துடிப்­பு­டன் செயல்­பட்­டார். 1973 முதல் 1979 வரை சிங்­கப்­பூர் கூடைப்­பந்­துச் சங்­கத்­தின் தலை­வ­ரா­க­வும் 1977 முதல் கிரேத்­தார் ஆயர் மக்­கள் அரங்­கின் நிர்­வா­கக் குழுத் தலை­வ­ராக இருந்தார்.

சீனத் தெருக்­கூத்­துக் கலை ஆர்­வ­ல­ரான திரு புவா, ஹாங்­காங், தைவான், சீனா ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து தலை­சி­றந்த தெருக்­கூத்­துக் கலை­ஞர்­களை சிங்­கப்­பூ­ருக்கு வர­வ­ழைத்­தார்.

திரு புவா கால­மா­னது குறித்து நேற்று முன்­தி­னம் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கருத்­து­ரைத்த தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது, "திரு புவா­வின் மறைவு மிகுந்த கவ­லை­ய­ளிக்­கிறது. இன்று வரை நிமிர்ந்து நிற்­கும் தோ பாயோ, புக்­கிட் மேரா, தெம்­ப­னிஸ் சாஃப்ரா பொழு­து­போக்கு மன்­றங்­க­ளின் உரு­வா­கத்­துக்கு மிக முக்­கிய பங்­காற்­றி­வர் திரு புவா.

"தேசிய சேவை­யின் வலு­வான ஆத­ர­வா­ள­ரான திரு புவா, தேசிய சேவை­யா­ளர்­க­ளின் பங்­க­ளிப்­புக்கு முறை­யான அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட வேண்­டும் என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தார். ஓய்­வுக்­குப் பிறகு திரு புவா சாஃப்ரா­வின் நிகழ்ச்­சி­களில் அடிக்­கடி பங்­கேற்­றார்," என்று தெரி­வித்­தார்.

"திரு புவா, அடித்­தள மக்­க­ளு­டன் மிகுந்த அணுக்கத் தொடர்­பில் இருந்த ஒரு எம்பி. தெம்­ப­னிஸ் எனும் ஒரு கிரா­மப்­புற நகர் வீவக நக­ர­மாக உரு­மா­று­வதை திரு புவா கண்­கூ­டா­கப் பார்த்­தார். டாக்­டர் கோவின் கிரேத்­தார் ஆயர் தொகு­தியை திரு புவா பார்த்­துக்­கொண்­டார் என்று பிர­த­மர் லீ சியன் லூங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

"மக்­கள் செயல் கட்­சி­யின் விசு­வா­ச­மான, வலு­வான, முன்­னோ­டித் தொண்­டர் திரு புவா. 1988ல் அவர் அர­சி­ய­லி­லி­ருந்து ஓய்வு பெற்ற பிற­கும், அவர் கட்சி மற்­றும் அடித்­தள நிகழ்ச்­சி­க­ளி­லும் ஆத­ர­வ­ளித்­தார்.

"தமக்­குக் கொடுக்­கப்­பட்ட பொறுப்­பு­களில் சிறப்­பா­கப் பங்­காற்றி, காலம் வரும்­போது அதை இளை­யத் தலை­வர்­க­ளி­டம் ஒப்­படைத்து, அவர்­க­ளுக்­குத் தொடர்ந்து ஆத­ர­வ­ளித்து வந்­துள்­ளார்," என்றும் பிர­த­மர் கூறினார்.

தொழி­லா­ளர் இயக்­கத்­துக்கு திரு புவா ஆற்­றிய அய­ராத பங்­க­ளிப்­புக்கு நன்றி தெரி­விக்­கும் வகை­யில், 1979ல் என்­டி­யுசி அவ­ருக்கு தொழி­லா­ளர் தோழர் எனும் சிறப்பு விருதை அளித்து கௌர­வித்­தது.

திரு புவா­வின் மறைவு குறித்து நேற்று தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் கருத்­து­ரைத்த சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­ச­ரும் தெம்­ப­னிஸ் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திரு மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி, "திரு புவா, தெம்­ப­னிஸ் தொகுதி எம்­பி­யாக இருந்­த­போது, பாய லேபார் விமான நிலை­யத்­தின் கட்­டு­மா­னப் பணி­க­ளுக்­காக தெம்­ப­னிஸ் கிரா­ம­வா­சி­களை வீவக வீடு­க­ளுக்கு குடி­பெ­யரும்படி ஊக்குவிப்பதில் பெரும் உதவி செய்­தார்.

"புதிய மேம்­பா­டு­க­ளுக்கு வழி­வி­டும் வகை­யில் 13 கிரா­மத்து சீனக் கோயில்­களை ஒருங்­கிணைக்க தெம்­ப­னிஸ் சீனக் கோயில் ஒன்றை உரு­வாக்­கு­வ­தில் திரு புவா முக்­கிய பங்­காற்­றி­னார்," என்றார்.

மனைவி 85 வயது திருவாட்டி டான் சியோக் டின், மூன்று பிள்ளைகள் ஆகியோரை விட்டுச் செல்கிறார் திரு புவா பா லீ.