காவல்துறை அதிகாரியையும் பேருந்து ஓட்டுநரையும் கடும் சொற்களால் திட்டியவருக்குச் சிறை

காவல்துறை அதிகாரியையும் பேருந்து ஓட்டுநரையும் கடும் சொற்களால் திட்டியவருக்குச் சிறை

3 mins read
307fd777-5ea1-469c-a381-54ff539a3c34
-

கடந்த ஆண்டு பிற்­ப­கு­தி­யில் மது­போ­தை­யில் மற்­ற­வர்­களை தொந்­த­ரவு செய்­த­தற்­காக $1,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்ட ஒரு நபர், சில மாதங்­க­ளுக்­குப் பிறகு மீண்­டும் குற்­றம் புரிந்­தார்.

இந்த ஆண்டு வெவ்­வேறு சம்­ப­வங்­களில், அவர் மது­போ­தை­யில் காவல்­துறை அதி­கா­ரி­யை­யும் பேருந்து ஓட்­டு­ந­ரை­யும் மோச­மான வார்த்­தை­க­ளால் திட்­டி­னார்.

அந்த வகை­யில், மூன்று துன்­பு­றுத்­தல் குற்­றச்­சாட்­டு­களையும் பொது இடத்­தில் மது­போ­தை­யில் மற்­ற­வர்­க­ளுக்கு தொந்­த­ரவு செய்த ஒரு குற்­றத்­தை­யும் ஒப்­புக்­கொண்ட 65 வய­தா­கும் மூர்த்தி நாகப்­ப­னுக்கு, நேற்று ஐந்து வாரச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

துப்­பு­ர­வுத் தொழி­லா­ளி­யான அந்­தச் சிங்­கப்­பூ­ரர் இந்த ஆண்டு மார்ச் 28ஆம் தேதி இரவு 7 மணி­ய­ள­வில் லிட்­டில் இந்­தி­யா­வி­லுள்ள தேக்கா சந்­தைக்கு அரு­கில் உள்ள பேருந்து நிறுத்தத்திலிருந்து சேவை எண் 147ல் ஏறி­ய­போது மது­போதை­யில் இருந்­தார்.

மேலும் அவர் தமது முகக் கவ­சத்தை சரி­யாக அணி­ய­வில்லை.அதைச் சரி­யாக அணி­யு­மாறு பேருந்து ஓட்­டு­நர் நினை­வூட்­டி­ய­போது, மூர்த்தி அதி­ருப்தி அடைந்து, 33 வய­தான அந்த ஓட்­டு­ந­ரைத் தகாத வார்த்­தை­க­ளால் திட்­டி­னார்.

சுமார் 15 நிமி­டங்­க­ளுக்­குப் பிறகு காவல்­து­றைக்கு இச்­சம்­ப­வம் பற்றி தக­வல் கொடுக்­கப்­பட்­டது என்று அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் திரு ராஜ் கிஷோர் ராய் கூறி­னார்.

அடுத்து என்ன நடந்­தது என்­பதை நீதி­மன்ற ஆவ­ணங்­கள் வெளி­யி­ட­வில்லை. ஆனால் இரண்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு மே 29ஆம் தேதி அன்று தேக்கா சந்தை அருகே மூர்த்தி மீண்­டும் மது­போ­தை­யில் இருந்தது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது. அன்று பிற்­ப­கல் 1 மணி­ய­ள­வில் அவர், அவ்­வ­ழி­யா­கச் செல்­ப­வர்­களைத் தகாத வார்த்­தை­க­ளால் திட்­டி­ய­தைக் கண்டு காவல்­து­றை­யி­ன­ருக்­குத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது.

காவல்­துறை அதி­கா­ரி­யான 25 வயது சார்­ஜண்ட் ஜேசன் சோங் ஜுன் கிட்­டும் அவ­ரது சகாக்­களும் சம்­பவ இடத்­திற்கு வந்­த­னர். மூர்த்­தியை அந்த இடத்­தை­விட்டு வெளி­யே­று­மாறு அறிவுறுத்தினர்.

"சார்­ஜண்ட் சோங்­கும் அவ­ரது சகாக்­களும் மூர்த்தி அந்த வளா­கத்தை விட்டு வெளி­யே­று­வதை உறு­தி­செய்ய அவரை அழைத்­துச் சென்­ற­னர்," என்று வழக்­க­றி­ஞர் திரு ராஜ் கூறி­னார்.

"குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர் தேக்கா சந்தை முன் சிராங்­கூன் சாலை­யில் உள்ள பேருந்து நிறுத்­தத்­தில் இருந்­த­போது, மூர்த்தி அவ­ரைச் சுற்­றி­யி­ருந்த காவல்­துறை அதி­காரி களில் ஒரு­வரை நோக்கி தொடர்ந்து குரல் எழுப்பி எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­னார். பின்­னர் அவர் மேலும் கோப­ம் அடைந்து காவல்­துறை அதி­காரியைத் திட்டினார். அதன் பிறகு, மூர்த்தி கைது செய்­யப்­பட்­டார்.

போலிஸ் கன்­டோன்­மெண்ட் வளா­கத்தை நோக்­கிச் செல்­லும் காவல்­துறை வாக­னத்­தின் பின் இருக்­கை­யில் அமர்ந்­தி­ருந்த மூர்த்தி, சார்­ஜண்ட் சோங்கை தகாத வார்த்­தை­க­ளால் திட்டி, அந்த அதி­கா­ரிக்­குக் கொலை மிரட்­டல் விடுத்­தார்.

அந்த நாளின் பிற்­ப­கு­தி­யில், மத்­திய காவல்­துறை பிரிவு தலை­மை­ய­கத்­தில் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கத் தகு­தி­யா­ன­வர் என்­பதை உறுதி செய்­வ­தற்­காக மருத்­துவ மதிப்­பீட்­டிற்கு மூர்த்தி உட்­படுத்­தப்­பட்­டார். அப்­போது அவர் மற்­றொரு காவல்­து­றை­யின் அதி­கா­ரி­யான 20 வயது செஸ்­வென் சீ சின் ஷென்னை நோக்கி ஆபா­ச­மான கை சைகை­யைக் காட்­டி­னார்.

ஒவ்­வொரு துன்­பு­றுத்­தல் குற்­றச்­சாட்­டுக்­கும், குற்­ற­வாளி என்று நிரூ­பிக்­கப்­பட்­ட­வ­ருக்கு ஓர் ஆண்டு வரை சிறைத்­தண்­ட­னை­யும் $5,000 வரை அப­ரா­த­மும் விதிக்­கப்­ப­ட­லாம்.