தம் தாயார் உட்பட பலரிடம் திருடிய ஆடவருக்குச் சிறை

2 mins read
a32ec2e5-226b-4ea5-af93-760c2686400a
-

ஏறக்­கு­றைய இரண்டு ஆண்­டு­களில், இளை­யர் ஒரு­வர் தொடர்ந்து பல குற்­றங்­க­ளைப் புரிந்­துள்­ளார். பெண் ஒரு­வரை மான­பங்­கப்­ப­டுத்­தி­யது, பள்­ளி­வா­ச­லில் வழி­பாட்­டில் ஈடு­பட்­ட­வர், உணவு விநி­யோ­கிப்­பா­ளர், சொந்த தாயார் ஆகி­யோ­ரி­டம் திரு­டி­யது ஆகி­யவை அவற்­றில் அடங்­கும்.

தற்­போது 22 வய­தா­கும் நூர் ஹஃபிசாத் சிலா­மாட்­டுக்கு நேற்று இரண்டு மாதங்­கள் இரண்டு வார சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

திருட்டு, மான­பங்­கம், நேர்­மை­யற்ற முறை­கேடு ஆகிய ஐந்து குற்­றச்­சாட்­டு­களை ஹஃபிசாத் ஒப்­புக்­கொண்­டார். மேலும் ஏழு குற்­றச்­சாட்­டு­கள் தண்­ட­னை­யில் பரி­சீ­லிக்­கப்­பட்­டன.

குற்­றங்­க­ளைப் புரி­யும்­போது வேலை­யில்­லா­மல் இருந்த ஹஃபி சாத், 2019, மார்ச் 7ஆம் தேதி அன்று வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக் ஒன்­றில் மின்­தூக்­கிக்­

கா­கத் காத்­தி­ருந்­த­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

27 வயது பெண் ஒரு­வர் வேலை முடிந்து வீட்­டிற்கு செல்­லும் வழி­யில் முன்­தூக்­கிக் கூடத்­தில் மின்­தூக்­கிக்­காக காத்­தி­ருந்­த­போது, ஹஃபிசாத் அவரைக் கவ­னித்­தார். மின்­தூக்கிக் கதவு திறக்­கும் நேரத்­தில் ஹஃபிசாத் தன் கையால் பெண்­ணின் இடது பிட்­டத்தை ஒரு முறை தட்­டி­னார். அப்பெண் திரும்பி ஹஃபிசாத்தை முறைத்­தார். இது கண்­கா­ணிப்பு கேம­ரா­வில் பதி­வா­னது. பாதிக்­கப்­பட்ட பெண் காவல்­து­றை­

யி­னரை அழைத்­தார்.

அந்த ஆண்­டின் பிற்­ப­கு­தி­யில், ஹஃபிசாத் திரு­டத் தொடங்­கி­னார். நவம்­பர் 16, 2019 அன்று, 51 வய­தான தமது தாயார் தூங்­கிக் கொண்­டி­ருந்­த­போது, அவர் தாயின் பையில் இருந்து $250ஐ திரு­டி­னார்.

பிப்­ர­வரி 10, 2020 அன்று, ஹஃபிசாத் பொங்­கோ­லில் உள்ள அல்-இஸ்லா பள்­ளி­வா­ச­லில் தொழு­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த 52 வயது ஆட­வ­ரின் கைபே­சி­யைத் திரு­டி­னார்.

இந்த ஆண்டு ஜன­வரி 23 அன்று, 47 வய­தான கிராப்­ஃபுட் உணவு விநி­யோ­கிப்­பா­ளர் பொங்­கோ­லில் உள்ள ஒரு புளோக்­கின் கீழே தனது மின்­சார சைக்­கிளை விட்­டுச் சென்­றார்.

அவர் திரும்பி வந்­த­போது, ​​மின்­சார சைக்­கி­ளில் அவ­ரது கிராப் பையில் இருந்த அவ­ரது கருப்புப் பை காணா­மல் போனதை உணர்ந்­தார். பையில் அவ­ரது பாஸ்­போர்ட் மற்­றும் $700 பணம் அதில் இருந்­தது.

கண்காணிப்பு கேமராக்களில் ஹஃபிசாத் குற்றச்செயல்கள் பதிவானதை அடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.