குடிமக்களை கொவிட்-19 தொற்றி லிருந்து பாதுகாக்கும் நோக்கத் தில் தெமாசெக் அறநிறுவனம் ஆறாவது முறையாக இலவச முகக்கவசங்களை விநியோக்கி றது.
இதற்காக முகக்கவசங்களை விநியோகிக்கும் தானியக்க இயந்திரங்கள் தீவு முழுவதும் நிறுவப்பட்டு வருகின்றன.
ஜனவரி 10ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதி வரை இயந்திரங்களிலிருந்து இலவச முகக்கவசங்களை குடிமக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
முகக்கவசங்கள் புதிய அளவுகளில் இருக்கும் என்பதை இயந்திரங்களில் ஒட்டப்பட்டுள்ள வாசகங்கள் தெரிவிக்கின்றன.
தெமாசெக் நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது, இது குறித்த விவரங்கள் அடுத்து வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்தது. ஒரு முறை பயன்படுத்தப்படும், பலமுறை பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான முகக்கவசங்களை அறநிறுவனம் கடந்த காலங்களில் விநியோகித்தது. கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரை அது கடைசியாக முகக்கவசங்களை விநியோகித்தது. அப்போது 1.13 மில்லியன் குடும்பங்கள் 'என்95' மற்றும் ஐம்பது அறுவை சிகிச்சை முகக்கவசங்களை இலவசமாக பெற்றுக்கொண்டன.
இந்த விநியோகத்துக்கு 15 கேப்பிட்டல் மால், தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடி உட்பட தீவு முழுவதும் 130 முகப்புகள் அமைக்கப்பட்டன.
அப்போதைய தெமாசெக் அறநிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஹோ சிங், 'என்95' முகக்கவசங்களுக்கு 95 விழுக்காடு வடிகட்டும் ஆற்றல் இருப்பதால் சளிக்காய்ச்சல் அறிகுறி உள்ளவர்களும் மருத்துவமனை அல்லது தாதிமை இல்லங்களுக்குச் செல்பவர்களும் அணியலாம் என்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
கொவிட்-19 நோயாளிகளை பராமரிப்பது உள்ளிட்ட தொற்று ஆபத்து அதிகமுள்ள பணியில் இருப்பவர்கள் 'என்95' முகக்கவசங்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தெமாசெக் டிரஸ்ட் இயக்குநர் சபையில் இடம்பெற்றுள்ள ஹோ, மருத்துவ தரம்வாய்ந்த அறுவை சிகிச்சைக்கான முகக்கவசம், 'என்95' எனப் பல வாய்ப்புகளில் சிறந்த பாதுகாப்பை வழங்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் மறுபடியும் பயன்படுத்தக்கூடிய 99.75 விழுக்காடு நுண்ணுயிர்களைத் தடுக்கும் லிவிங்கார்ட் தயாரிப்பின் முகக்கவசங்களை தெமாசெக் அறநிறுவனம் விநியோகித்தது.