மனோவியல் மற்றும் உணர்வுபூர்வ ஆதரவு வழங்கி வரும் தேசிய பராமரிப்பு நேரடித் தொலைபேசி சேவையின் நேரம் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து குறைக்கப்படுகிறது. தற்போது காலை 8.00 மணியிலிருந்து நள்ளிரவுவரை அது சேவை வழங்கி வருகிறது. இனி காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை அந்தச் சேவை செயல்படும்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை 50,000க்கும் மேற்பட்டோர் இச்சேவையை நாடியுள்ளனர்.

