சிங்கப்பூரில் திங்கள் மதியம் வரை 101 புதிய ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
புதிதாக 280 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 134 பேர் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள். மேலும் மூவர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதனால் கொவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 825க்கு அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் இணையத் தளம் இந்த விவரங்களைத் தெரிவித்தது.