உள்ளூர் சுற்றுலாவுக்கு உதவிய 'ரீடிஸ்கவர்'

உள்ளூர் சுற்றுலாவுக்கு உதவிய 'ரீடிஸ்கவர்'

1 mins read
541efac0-0ebb-4eee-bc9e-6f5c863d9673
-

சிங்­கப்­பூர், இன்­னும் சிறிது காலத்­திற்கு உள்­ளூர் சுற்­று­லா­வையே நம்­பி­யி­ருக்க வேண்­டும் என்று சிங்­கப்­பூர் பய­ணத் துறை கழ­கத்­தின் தலைமை நிர்­வாகி கீத் டான் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக உள்­ளூர் சுற்றுலா இல்­லை­யென்­றால் ஹோட்­டல்­கள் மற்­றும் சுற்­று­லாத் தலங்­கள் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

கொள்­ளை­நோய்க்கு முந்­தைய காலத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் உள்­ளூர் சுற்­றுலா மேம்­பட்ட நிலை­யில் இருந்து வரு­கிறது.

கடந்த டிசம்­பர் 2020ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட 320 மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள 'ரீடிஸ்­க­வர்' பற்­றுச்­சீட்டு உள்­ளூர் சுற்­றுலா வளர்ச்­சிக்கு பேரு­த­வி­யாக இருந்­தது. தலா நூறு வெள்ளி மதிப்­புள்ள பற்­றுச்­சீட்­டுக்கு மூன்று மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­கள் தகுதி பெற்­றி­ருந்­த­னர். டிசம்­பர் 1ஆம் தேதி நில­வ­ரப்­படி 1.4 மில்­லி­யன் சிங்­கப்­பூ­ரர்­கள் 'ரீடிஸ்­க­வர்' பற்­றுச்­சீட்டை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

இத­னைப் பயன்­ப­டுத்­தா­த­வர்­க­ளுக்கு உள்­ளூர் சுற்­றுலா தலங்­கள் அல்­லது ஹோட்­ட­லில் தங்­கு­வ­தற்கு முன்­ப­திவு செய்ய இம்­மா­தம் 31ஆம் தேதி வரை அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது.