ஏற்கெனவே உருமாறிய கொவிட்-19 கிருமிகளுடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரானுக்கு பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.
இது, வேகமாக பரவும் தன்மையைக் கொண்டிருந்தாலும் தீவிர பாதிப்புகளை இதுவரை ஏற்படுத்தவில்லை என்பதை சான்றுகள் காட்டுவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க கடந்த ஒரு மாதகாலமாக கடுமையான கட்டுப் பாடுகள் அமலாக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சென்ற திங்கள்கிழமையிலிருந்து ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் அல்லது சமூகப் பராமரிப்பு நிலையங்களில் குணமடைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ஓமிக்ரான் தொற்று உள்ளவர்கள், தேசிய தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் அல்லது பராமரிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஓமிக்ரான் தொற்றுக்கு மாறுபட்ட வகையில் சிகிச்சை அளிப் பதற்காக அவர்களை மற்ற நோயாளிகள் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தால் சுகாதார வசதிகளுக்கு நமக்கு நாமே நெருக்கடி ஏற்படுத்திக் கொள்வதற்குச் சமம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தில் உள்ள சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரப் பள்ளியின் இணைப் பேராசிரியர் சு லி யாங் கூறியுள்ளார். அதே பள்ளியின் ஆய்வுப் பிரிவின் உதவி முதல்வரான இணைப் பேராசிரியர் அலேக்ஸ் குக், ஓமிக்ரான் தொற்றுக்கான தொடர்புகளைக் கண்டறிதல், தனிமைப்படுத்தல் ஆகியவற்றை எப்போதும் கடுமையாக பின்பற்ற முடியாது என்றார்.
"சில மாதங்களுக்கு முன்பு இல்லத் தனிமைக்கான விதிமுறைகள் அடிக்கடி மாற்றப்பட்டன. அதே போன்ற சூழ்நிலை மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்," என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்று இதுவரை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார அைமச்சு தெரிவித்தது.
அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையோ, உயிர்வாயு உதவியோ தேவைப்படவில்லை. பெரும்பாலானவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று அமைச்சு கூறியிருந்தது.
ஆசிய பசிபிக் மருத்துவ நுண்ணுயிரியல் மற்றும் தொற்றுநோய் தடுப்பு சமூகத்தின் தலைவரான பேராசிரியர் பால் தம்பையாவும் ஓமிக்ரான் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.
"முந்தைய உருமாறிய கிருமி களைவிட ஓமிக்ரானுக்கு வீரியம் அதிகமில்லை என்பது தற்போது தெரிந்து விட்டது, இதனால் காசநோய் அல்லது சுவாச தொற்றுநோய் ேபான்ற எளிதில் பரவக் கூடிய நோய்களைப் போல கொவிட்-19க்கும் சிகிச்சை அளிக்கலாம்" என்று அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.