சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே 'விடிஎல்' வழியாக பயணி களை ஏற்றிச்செல்லும் இரண்டு பேருந்து நிறுவனங்கள், 3வது தரப் பினரிடமிருந்து பயணச் சீட்டுகளை வாங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளன.
சில இணையத் தளங்களில் பயணச்சீட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
கேரசல் இணையத்தளத்தில் சிங்கப்பூர்-மலேசிய பயணச் சீட்டு 120 வெள்ளிக்கு விற்கப்படுவதாக தெரிகிறது.
இது, தற்போதைய கட்டணத்தைவிட எட்டு மடங்கு அதிகம்.
சிங்கப்பூர்-ஜோகூர் பேருந்து பயணச்சீட்டுகளை வாங்குவது சவாலாக இருப்பதாலும் போதிய நேரம் இல்லாததாலும் பலர் அதிக விலைக்கு வாங்கத் தயாராக உள்ளனர் என்று சீன நாளேடான ஷின்மின் டெய்லி நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.
கேரசலில் சேவை வழங்கும் ஒருவர், பயணிகள் சார்பில் பயணச் சீட்டுகளை வாங்க முன்பணம் செலுத்தி தனிப்பட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
'டிரான்ஸ்டார் டிராவல்' நிர்வாக இயக்குநரான எல்சன் யாப், நிறுவனத்தின் இரண்டு அதிகாரபூர்வ விற்பனைத்தளமான அதன் இணையத்தளம் மற்றும் 'ஷாப்பி' ஆகியவற்றிலிருந்து பயணச் சீட்டு களை வாங்குமாறு கேட்டுக் கொண்டார்.
பயணச்சீட்டுகளை வாங்குவதற்காக 3வது தரப்பினரிடம் கடவுச்சீட்டு எண், பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவங்களை அளிப்பது பாதுகாப்பானது அல்ல என்றார் அவர்.
இதற்கிடையே காஸ்வே லிங்க் நிறுவனம், சமூக ஊடகங்களில் பயணச்சீட்டு விற்கப்படுவதைத் தடுக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறது.
'விடிஎல்' பயணச்சீட்டு விற்பனை தொடங்கியதும் ஏராளமான பயணிகள் வாங்க முற்பட்டதால் அதனை பேருந்து நிறுவனங்களின் இணையத்தளங்களால் சமாளிக்க முடியவில்லை. இதனைப் பயன் படுத்தி சிலர் லாபம் சம்பாதிக்க விரும்புவதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரண்டு பேருந்து நிறுவனங் களிடமிருந்து வாங்கப்படும் பயணச் சீட்டுகளை மற்றொருவருக்கு மாற்ற முடியாது. ஒட்டுமொத்தமாக பயணச் சீட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதை இது தடுக்கிறது. இந்த நிலையில் அதிகாரபூர்வமற்ற முறையில் வாங்கப்படும் பயணச் சீட்டுகள் செல்லுபடியா காது என கூற எங்களுக்கு உரிமை உள்ளது என்று காஸ்வே லிங் நிர்வாகம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில் எச்சரித்துள்ளது.