உணவுப் பொருட்களை நீண்டநாள் பாதுகாக்கும் பொட்டலம்

உணவுப் பொருட்களை நீண்டநாள் பாதுகாக்கும் பொட்டலம்

2 mins read
0bf99827-dd7c-4845-b8cc-4ebec73b6373
காய்கறி, பழங்களை நீண்டநாள் கெடாமல் இருக்க புதிய பொட்டலத்தை சிங்கப்பூர், அமெரிக்க ஆய்வாளர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு உயிர்பொறியியல் துறையின் இயக்குநர் மேரி சான் (வலம்), முதன்மை ஆய்வு மாணவர் டாக்டர் சுரேஷ்குமார் ராமன் பிள்ளை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பழங்­கள், இறைச்சி, காய்­கறி போன்ற உண­வுப் பொருட்­களை நீண்­ட­நாள் பாது­காக்­கும் பொட்­ட­லத்தை சிங்­கப்­பூர், அறி­வி­யல் ஆய்­வா­ளர்­கள் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

குறிப்­பாக குளிர்­ப­த­னப் பெட்­டிக்கு வெளியே வைக்­கப்­படும் உணவு வெகு­வி­ரை­வில் கெட்­டு­வி­டு­கிறது. ஆனால் புதிய பொட்­ட­லம், நுண்­ணு­யிர்க் கிருமி, பூஞ்சை போன்­றவை ஏற்­ப­டா­மல் தடுக்­கிறது.

இம்­மு­றை­யில் பாது­காக்­கப்­பட்ட 'ஸ்ட்­ரா­பெர்ரி' பழங்­கள் ஒரு வாரம் வரை கெடா­மல் பாது­காக்­கப்­பட்­டது. இந்­தப் பழம் சாதா­ர­ண­மாக நான்கு நாட்­க­ளுக்கு மேல் தாங்­காது. அதற்­குள் அழுக ஆரம்­பித்து­ வி­டும்.

நெகிழி போன்று தோற்­ற­ம­ளிக்­கும் அந்­தப் பொட்­ட­லத்தை சிங்­கப்­பூ­ரின் நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழ­கம், அமெ­ரிக்­கா­வின் ஹார்­வர்ட் டி.எச். சான் பொதுச்­ சு­கா­தா­ரப் பள்ளி ஆகி­ய­வற்­றின் ஆய்­வா­ளர்­கள் இணைந்து உரு­வாக்­கி­யுள்­ள­னர்.

சோளப் புர­தம், மாவுச்­சத்து மற்­றும் பிற இயற்­கைப் பொருட்­க­ளைக் கொண்டு புதிய பொட்­ட­லம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

தைமே எண்­ணெய், சிட்­ரிக் அமி­லம் போன்ற நுண்­ணு­யிர்க் கிரு­மி­களைக் கொல்­லும் இயற்கைப் பொருட்­களும் அதில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன.

இறைச்சி, மீன், பழங்­கள், காய்­கறி, சமைக்­கப்­பட்ட உணவு போன்­ற­வற்­றுக்கு புதிய பொட்­ட­லம் ஏற்­றது என்று இணை ஆய்­வா­ள­ரான நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நுண்­ணு­யிர் எதிர்ப்பு உயிர்­பொ­றி­யி­யல் நிலைய இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் மேரி சான் தெரி­வித்­தார். தற்­போ­தைய நெகிழிக்கு மாற்றுப் பொரு­ளைக் கண்­டு­பி­டிப்­பதே ஆய்­வின் முக்­கிய நோக்­கம் என்­றார் அவர்.

புதிய பொட்­ட­லம், எளி­தில் மக்கி­ வி­டு­வ­தால் சுற்­றுச்சூழ­லைப் பாதிக்­காது என்­றும் அவர் கூறி­னார்.

குளிர்­சா­தன வச­தி­யில்­லா­மல் பழங்­க­ளை­யும் காய்­க­றி­க­ளை­யும் அதிக நாட்­க­ளுக்கு கெடா­மல் புதிய பொட்­ட­லம் பாது­காப்­ப­தோடு அப்­போ­து­தான் பறித்­த­து­போல புதி­தா­க­வும் இருக்­கும் என்று மேரி சான் கூறி­னார்.

ஆய்­வுக் குழு உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரும் சுற்­றுச்­சூ­ழல் நிபு­ண­ரு­மான ஹார்­வர்ட் டி.எச். சான் பள்­ளி­யின் துணைப் பேரா­சி­ரி­ய­ரான பிலிப் டெமோ­கி­ரி­டாவ், உண­வுப் பாது­காப்பு, உண­வுக்­க­ழிவு, சுற்­றுச்­சூ­ழ­லுக்­குப் பாதிப்பை ஏற்­ப­டுத்­தாத பொருள் ஆகிய மூன்று வகை­களில் உண­வைப் பாது­காக்க புதிய முறை உத­வு­கிறது என்று சொன்­னார்.

ஆய்­வின் முடி­வு, கடந்த அக்ேடா­ப­ரில் 'ஏசி­எஸ் அப்­ளைட் மெட்­டி­ரி­யல்ஸ் அண்ட் இண்­டர்­ஃபே­சஸ்' சஞ்­சி­கை­யில் வெளி­யிடப்­ பட்­டது.