சிங்கப்பூரில் தனியார் வீட்டு வாடகை ஆறு ஆண்டு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
தேவை அதிகமாக உள்ளதால் வாடகை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சொத்துச் சந்தைப் பகுப்பாய்வாளர்கள் முன்னுரைக்கின்றனர்.
இதனால், பணவீக்க நெருக்கு
தலுக்கு இடையே, இங்கு வசிக்கும் வெளிநாட்டினருக்கான வீட்டுச் செலவு கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டதால் கட்டடங்களின் கட்டுமானம் தாமதடைந்தது.
அதனால் புதிய வீடுகள் கிடைக்கும் வரை வாடகை வீட்டில் தங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
குறிப்பாக, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான வசதியை நாடி இளம் சிங்கப்பூரர்கள் பலர் தங்களது குடும்பத்திலிருந்து தனியே சென்றனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளிலிருந்து திரும்பிய வீட்டு உரிமையாளர்கள் தங்களது வீடுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால் வாடகை வீடுகளின் எண்ணிக்கை குறைந்தது. வாடகைக் கட்டணம் உயர அதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
"கொள்ளைநோயுடன் வாழக்
கூடிய நிலையில் பணவீக்கம் என்பது தற்போது பேசுபொருளாகி
விட்டது.
"தேவை அதிகமாக இருப்பதால் $2,500 முதல் $4,000 வரையிலான மாத வாடகைக்குரிய வீடுகள் அதிக நெருக்குதலை எதிர்நோக்கு கின்றன.
"சில வீடுகளின் வாடகை குறைந்தபட்சம் 10 விழுக்காட்டி
லிருந்து 15 விழுக்காடு வரை ஏற்கெனவே ஏறிவிட்டது," என்றார் 'சேவில்ஸ்' என்னும் ஆய்வு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆலன் சியோங்.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் தனியார் வீடுகளின் வாடகை 7.1 விழுக்காடு உயர்ந்துவிட்டதாகவும் காலியான வீடு
களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததும் இதற்கு ஒரு காரணம் என்றும் சிங்கப்பூர் நாணய ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்திற்கான நிதி நிலைத்தன்மை மறுஆய்வு அறிக்கையில் அது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
தற்போது ஓரளவுக்குப் போதுமான அளவுக்கு வாடகை வீடுகள் இருந்தபோதிலும் காலியாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை குறைந்து வருவது இனி வரும் காலத்தில் வாடகை ஏற்றத்திற்கு வழிவகுக்கக்கூடும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் வாடகைக் கட்டணங்களுக்கான குறியீடு 111.3க்கு அதிகரித்தது.
2015ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குப் பிறகு இந்த அளவுக்கு இந்தக் குறியீடு ஏற்றம் கண்டிருப்பது இப்போதுதான் என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

