'எஸ்டி பாக்கெட் மணி' எனப்படும் பள்ளி மாணவர் கைச்செலவு நிதித் திட்டத்தின் மூலம் இவ்வாண்டு 13,000 பேர் பலனடைந்து உள்ளனர்.
இவர்களுக்கு $8,861,222 நிதி உதவி அளிக்கப்பட்டு உள்ளது. 2000ஆம் ஆண்டு இத்திட்டம் தொடக்கம் கண்டது முதல் இதுவே ஆக அதிக உதவித்தொகை. மேலும், கொள்ளைநோய் நெருக்கடி காரணமாக உதவி கேட்டு வந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் இவ்வாண்டு 25 விழுக்காடு கூடியது.
குறைந்த வருமானக் குடும்பங்
களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அவர்களின் பள்ளி மூலம் கைச்செலவு நிதி வழங்கும் இந்த நிதி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழால் சமூகத்திட்டமாகத் தொடங்கப்பட்டது. இது தொடங்கப்பட்டது முதல், தேவையுள்ள சுமார் 180,000 பள்ளி மாணவர்களுக்கு $80 மில்லியனுக்கு மேல் உதவி அளிக்கப்பட்டுள்ளது.
திட்டப் பயனாளர்களில் மூவரும் அவர்களின் குடும்பத்தினரும் சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நேற்று மதிய விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அன்பளிப்புப் பைகளும் அவர்களுக்கு வழங்கப் பட்டன.

