வரவிருக்கும் சீனப் புத்தாண்டில் 'ஹோங் பாவ்' அன்பளிப்பின்போது புதிய நாணய நோட்டு
களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறு பொதுமக்களை சிங்கப்பூர் நாணய ஆணையம் வலியுறுத்தி உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சசூழலுக்கு உதவுவதோடு புதிய பண நோட்டுகளை வாங்குவதற்காக வங்கிகளின் முன் நீளும் வரிசைகளைக் குறைக்க
முடியும் என்று ஆணையம் கூறியுள்ளது. சீனப் புத்தாண்டு உட்பட இதர விழாக்காலங்களில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 100 மில்லியன் புதிய பண நோட்டுகளை வெளியிடப்படுவதாகவும் இவற்றில் பெரும்பாலானாவை
$2 நோட்டுகள் என்றும் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் ஆணையம் குறிப்பிட்டது.
சீனப் புத்தாண்டு முடிந்ததும் $2 நோட்டுகள் திரும்பவந்து
விடுவதாகவும் வழக்கத்திற்கு மீறிய பணப் புழக்கத்தைக் குறைக்க அவை அழிக்கப்படுவதாகவும் அது தெரிவித்தது. புதிய பண நோட்டுகளை அச்சடிக்க, வெவ்வேறு இடங்களுக்கு அவற்றைக் கொண்டுசெல்ல, பின்னர் அவற்றை அழிக்க என்று ஒவ்வோர் ஆண்டும் தேவையற்ற, வீண்முயற்சிகள் நிகழ்வதோடு சுற்றுச்சூழலுக்கு எதிர்மாறான தாக்கம் ஏற்படுவதாகவும் ஆணையம் கூறியது. இந்தப் போக்கைக் குறைக்க மின்னிலக்கப் பரிசளிப்பு முறையை உருவாக்குவது தொடர்பாக நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கத்துடனும் இணைந்து பணியாற்றி வருவதாக ஆணையம் மேலும் குறிப்பிட்டது.