வீட்டுக்குள் மாண்டுகிடந்த முதியவர்
தோ பாயோவில் உள்ள தமது வீட்டில் 63 வயது முதியவர் மாண்டுகிடக்கக் காணப்பட்டார். அந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டுக்காரர்கள் தெரி வித்ததைத் தொடர்ந்து காவல்துறைக்குத் தகவல் சென்றது.
மாண்டவர் ஸாங் யீ லோங் என அடையாளம் காணப்பட்டதாக ஷின் மின் சீன நாளிதழை மேற்கோள் காட்டி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி ெவளியிட்டுள்ளது. அவரது மரணம் பெரும்பாலும் இயற்கையானதாக இருக்கலாம் என்றும் அது தெரிவித்தது.
புளோக் 100 லோரோங் 1 தோ பாயோவில் உள்ள ஒரு வீட்டில் இயற்கைக்கு மாறான மரணம் நிகழ்ந்திருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) பிற்பகல் 2.57 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறை நேற்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறியது. அந்த ஆடவர் அசைவற்றுக் காணப்பட்டதாகவும் அவர் மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர் அறிவித்ததாகவும் அது குறிப்பிட் டது. இந்த மரணத்தில் சதி எதவும் இல்லை என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாகவும் விசாரணை தொடருவதாகவும் காவல்துறை கூறியது. தமது தாயாருடன் வசித்து வந்த ஆடவர், கடந்த ஆண்டு தாயார் மறைந்தது முதல் தனியாக இருந்துவந்ததாக அண்டைவீட்டார் கூறினர்.
நாடாளுமன்றம் கூடுகிறது
அடுத்த மாதம் (ஜனவரி) 10ஆம் தேதி திங்கட்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு நாடாளுமன்றக் கூட்டம் நடை பெறும் என்று நாடாளுமன்ற அலுவலர் நேற்று தெரிவித்தார்.
5 வெள்ளியில் தொடங்கி 'பைக்' வரை: வயதோடு வளர்ந்த திருட்டு
பதின்ம வயது முதல் அடிதடியிலும் பல்வேறு திருட்டுகளிலும் ஈடுபட்டு வந்த ஆடவருக்கான தண்டனை விதிப்பு அடுத்த மாதத்திற்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அந்தத் தண்டனை நேற்று விதிக்கப்பட இருந்தது. அதற்கு முன்னர், சீர்திருத்தப் பயிற்சிக்கு அந்த ஆடவர் தகுதி உள்ளவர்தானா என்பதை மதிப்பிட்டு அறிக்கை அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமது 16வது வயதில் கிளமெண்டி வட்டாரத்தில் உள்ள ஒரு வீட்டில் $5 ரொக்கம் திருடினார். அது அவர் ஈடுபட்ட முதல் திருட்டு. மூன்றாண்டுகளில் மோட்டார்சைக்கிள்களைத் திருடும் அளவுக்கு அவரது சட்டவிரோதச் செயல்கள் அதிகரித்தன.
இந்த மாதம் 20 வயதைத் தொட்ட அந்த ஆடவர், தம் மீது சுமத்தப்பட்ட அச்சுறுத்தல் குற்றம், பல்வேறு திருட்டுக் குற்றங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 10 குற்றச்சாட்டு களை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதர 14 குற்றச்சாட்டுகள் அப்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
நீதிமன்ற விசாரணைக்காக நேற்று அவர் மெய்நிகர் வாயிலாகத் தோன்றினார். முதல் குற்றத்தில் ஈடுபட்டபோது 16 வயது இளையர் என்பதால் அவரைப் பற்றிய விவரங்களை நீதிமன்றம் வெளியிடவில்லை. சீர்திருத்தப் பயிற்சி என்பதும் தண்டனைதான். அதற்கான மையத்தில் தடுத்து வைக்கப்படுவோருக்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பயிற்சி அளிக்கப்படும்.
சீன பொருளியல் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் கைகொடுக்கும்
தற்சார்பு வளர்ச்சி என்னும் புதிய பொருளியல் உத்தியை நோக்கி நடைபோடும் சீனாவுக்கு சிங்கப்பூர் தனது பங்கைச் செய்யமுடியும் என சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். கிழக்காசிய பெரும் பொருளியலை தென்கிழக்காசியச் சந்தையுடன் இணைப்பதில் சிங்கப்பூர் சிறப்பான பங்கை ஆற்றமுடியும் என்பது அதில் ஒன்று என்றார் அவர்.
குறிப்பாக, உலக வர்த்தகப்போக்கையும் விநியோகத் தொடரையும் மாற்றியமைப்பதன் மூலம் இது சாத்தியப்படும். இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக சீன துணைப் பிரதமர் ஹான் ஸெங்குடன் இன்று மெய்நிகர் வாயிலாக சந்திக்க இருக்கும் வேளையில் 'சாவ்பாவ்' சீன நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் திரு ஹெங் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இருதரப்பு ஒத்துழைப்புக்கான இணை குழுவின் வருடாந்திர உச்சநிலைச் சந்திப்பில் இரு நாட்டின் துணைப் பிரதமர்களோடு இதர அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த உச்சநிலைக் கூட்டம் 17வது ஆண்டாக இன்று நடக்க உள்ளது. வளர்ச்சி குன்றிய மேற்கு சீன வட்டாரத்தை தென்கிழக்காசியாவுடன் பயனுள்ள இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்படுத்தப்பட்ட சோங்கிங் தொடர்புத் திட்டம் பற்றி திரு ஹெங் எடுத்துரைத்தார். சிங்கப்
பூரின் பங்களிப்புக்கு அது ஒரு நல்ல உதாரணம் என்றார் அவர். கொரோனா கிருமிப் பரவல் சூழலில் சீனாவின் பொருளியல் வளர இது உதவியதாகவும் திரு ஹெங்
குறிப்பிட்டார். நிலம்-கடல் வர்த்தகத் தொடர் திட்டமான இது 2015ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கியது.
பிரகாச பிரசாரத்தில் $900,000 நிதி
'ஷைன் எ லைட்' என்னும் நன்கொடைப் பிரசாரத்தின் மூலம் இதுவரை $900,000 நிதி திரட்டப்பட்டுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கிய பிரசாரம் டிசம்பர் 31ல் நிறைவுறும். 'த மஜுரிட்டி டிரஸ்ட்' ஏற்று நடத்தும் இந்தப் பிரசார நடவடிக்கை யில் 60 விதமான ஒளிக்கற்றைகள் அங்குமிங்கும் அசையும். அதில் ஒரு ஒளிக்கற்றையை பார்வையாளர்கள் $20,000க்கு 'தத்து' எடுக்கலாம். இந்த நன்கொடை ஐந்து வெவ்வேறு நிதித் திட்டங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.

