போலி ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பித்த மற்றொருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

போலி ஆவணங்களை வங்கியிடம் சமர்ப்பித்த மற்றொருவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

2 mins read
e5d2b765-854c-4cee-8526-bcd9092987b1
-

சிட்­டி­பேங்க் வங்­கி­யி­ட­மி­ருந்து கடன் பெறு­வ­தற்­காக போலி­யான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பித்த குற்­றச்­சாட்­டின் பேரில் மற்­றொரு நபர் மாவட்ட நீதி­மன்­றத்­தில் நேற்று முன்­னி­லை­யா­னார்.

தற்­போது 31 வய­தா­கும் முகம்­மது நபில் முக­மது நாசர், செப்­டம்­பர் 2018ல் முன்­பின் தெரி­யாத பல நபர்­க­ளு­ட­னும் 'ஜாக்­சன்' என்று மட்­டுமே அறி­யப்­பட்ட ஒரு­வ­ரு­ட­னும் சேர்ந்து சதி­யில் ஈடு­பட்டு வங்­கியை ஏமாற்­றி­ய­தா­க­வும் ஒரு குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

'மைக்­ரோ­சா­ஃப்ட் ரீஜி­னல் சேல்ஸ் கார்ப்­ப­ரே­ஷன்' என்ற நிறு­வனத்­தில் பணி­பு­ரி­வ­தா­கக் கூறி, அந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்­களில் அடிப்­படை மாதச் சம்­ப­ள­மாக $7,258 பெற்­ற­தா­கக் கூறி, தனது பெய­ரில் தவ­றான ஊதி­ய விவரங்களை வங்­கி­யில் சமர்ப்­பித்­த­தாக அந்­த சிங்­கப்­பூ­ரர் மீது குற்­றம் சாட்­டப்­பட்­டது.

இதன் விளை­வாக, சிட்­டி­பேங்க் வங்­கி­யி­ட­மி­ருந்து நபில் $13,775 கட­னைப் பெற்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நபில் சிட்­டி­பேங்க் வங்­கி­யின் ஊழி­யர் அல்ல என்­றும், அடுத்த ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் அவர் குற்­றத்தை ஒப்­புக்­கொள்­வார் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வதாக அறி­யப்­படு­கிறது.

இம்­மாத தொடக்­கத்­தில், மேலும் ஒன்­பது சிங்­கப்­பூர் ஆட­வர்­­களும் வங்கி சம்­பந்­தப்­பட்ட ஏமாற்­றுக் குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு ஆளா­கி­னர்.

அவர்­களில் மூவ­ரான கிர்க் சுவா மின் சுவான், 28, குரு­மூர்த்தி சந்­தி­ரன், 26, ஜிம் பிரை­யன் சிம் ஜுன் ஹாங், 26 ஆகி­யோர் சிட்டி பேங்க் வங்­கி­யில் ஒப்­பந்த ஊழி­யர்­க­ளா­கப் பணி­பு­ரிந்து கொண்­டி­ருந்­த­போது, மற்­ற­வர்­க­ளு­டன் சேர்ந்து தவ­றான வரு­மான ஆவ­ணங்­க­ளைச் சமர்ப்­பித்து மொத்­த­மாக $180,000 கட­ன் பெற்று வங்­கியை ஏமாற்­றி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மற்ற ஆறு ஆட­வர்­க­ளான இங் ஜியா ஹாவ், 25, இயூ­ஜின் யாப் சியாங், 27, நோவா லூ யு யோங், 27, ஃபூ ஜின் தை, 27, நவின்­கு­மார் ராம­கி­ருஷ்­ணன், 28, சுவா ஹோங் வெய், 28 ஆகி­யோ­ர் எவ­ரும் அப்­போது சிட்­டி­பேங்க் வங்கி­யில் வேலை செய்­ய­வில்லை.

ஒன்­பது பேரும் செப்­டம்­பர் 2018ல் $24,795 வரை ரொக்­க­மாக வங்­கி­யைக் கடன் கொடுக்க வைத்து ஏமாற்­றி­ய­தா­கக் கூறப்­படு­கிறது.

இந்த ஒன்­பது பேர் சம்­பந்­தப்­பட்ட வழக்­கு­கள் இன்­னும் நிலு­வை­யில் உள்­ளன.

ஒவ்­வொரு மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கும் குற்­ற­வா­ளி என்று நிரூபிக்கப்பட்டவருக்கு 10 ஆண்டு­கள் வரை சிறைத்­தண்­ட­னை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­படும் என்று தெரிவிக்கப்பட்டது.