சுசுகி கிண்ண காற்பந்துப் போட்டியில் இந்தோனீசியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் குழு கடுமையாகப் போராடி தோல்வி அடைந்தது.
போட்டியிலிருந்து சிங்கப்பூர் குழு வெளியேறியதை அடுத்து, அதன் தலைமைப் பயிற்றுவிப்
பாளர் பதவியிலிருந்து விலகு
வதாக டட்சுமா யோஷிடா அறிவித்தார்.
சிங்கப்பூரில் உள்ள காற்பந்து ஆட்டக்காரர்கள், முன்னாள் ஆட்டக்காரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் பலர் இதுகுறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
"சவால்மிக்க காலகட்டத்தில் தம்மால் முடிந்த அனைத்தையும் யோஷிடா செய்துள்ளார்.
"இந்நிலையில், அவர் பதவி விலகுவது வருத்தம் அளிக்கிறது. சிங்கப்பூர் தேசிய காற்பந்துக் குழுவில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்கின்றன. தலைமைப் பயிற்றுவிப்பாளர் அல்லது தொழில்நுட்ப இயக்குநர் பதவிகளில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டால் அது குழுவுக்கு நல்லதல்ல.
"அடுத்த நியமனம் நிலைத்
திருக்க வேண்டும். குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருக்க வேண்டும்," என்று பாலஸ்டியர் கல்சா குழுவின் பயிற்றுவிப்பாளர் கிடிர் காமிஸ் தெரிவித்தார்.

