ஹோட்டல் அறை முன்பதிவு செய்வதில் மோசடி செய்ததாக ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இன்று (டிசம்பர் 30) இவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும்.
இந்த மோசடி தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை தங்களுக்குப் புகார் வந்ததாக காவல்துறை நேற்று கூறியது.
ஹோட்டல் ஒன்றில் அறையை முன்பதிவு செய்ய 45 வயது ஆடவர் ஒருவரிடம் பணம் தந்ததாகவும் ஆனால் உறுதிகூறியபடி அறை தரப்படவில்லை என்றும் ஏமாற்றப்பட்டவர் தமது புகாரில் தெரிவித்திருந்தார்.
உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய அங் மோ கியோ காவல்துறை பிரிவு அதிகாரிகள், புகார் கிடைத்த ஆறு மணி நேரத்தில் சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.
இதேபோன்ற பல மோசடிகளி லும் அந்த ஆடவர் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆடவருக்கு பத்தாண்டு வரை
யிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இணையத்தில் மலிவாக விலை குறிப்பிடப்படும் பொருள்களையும் சேவைகளையும் தவிர்க்குமாறு பொதுமக்களை காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும், அதிகாரபூர்வ விற்
பனையாளர்கள் நம்பிக்கைக்குரிய தரப்பினர் ஆகியோரிடம் மட்டுமே பொருள்களை வாங்குமாறும் அவர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
இயன்றவரை எந்தவொரு சேவைக்கும் முன்பணம் தரு
வதையும் நேரடி வங்கிப் பரிமாற்றத்தையும் தவிர்க்குமாறும் பொருள் வாங்குவோரின் பாதுகாப்புக்கு இது துணைபுரியாது என்றும் காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நம்ப வைப்பதற்காக உள்ளூர் வங்கிக் கணக்கு, அடையாள அட்டை நகல் அல்லது ஓட்டுநர் உரிம நகல் போன்றவற்றை மோசடிக்காரர்கள் 'வாட்ஸ்அப்' அல்லது 'வீசாட்' செயலி மூலம் அனுப்புவார்கள் என்றும் அதனை பொதுமக்கள் நம்பிவிட வேண்டாம் என்றும் மோசடியில் சிக்காமல் விழிப்புடன் இருக்குமாறும் அந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

