சீனாவின் பொருளியல் வளர்ச்சியடையும்போது, அது சிங்கப்பூர் நிறுவனங்களுக்குப் பல வாய்ப்புகளை அளிக்கலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார். தனது பொருளியலை வளர்க்க சீனா புதிய முறைக்கு மாறுகிறது. அதில் பங்காற்ற சிங்கப்பூர் எண்ணம் கொண்டுள்ளதென திரு ஹெங் குறிப்பிட்டார்.
"வட்டார, அனைத்துலக அளவில் சீன நிறுவனங்கள் வளரும் வாய்ப்புகளுக்கு சிங்கப்பூர் மிகச் சிறந்த தளமாக அமையலாம்," என்று திரு ஹெங் சொன்னார். சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவின் தொடர்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சந்திப்பில் செய்தியாளர்களிடம் அவர் அவ்வாறு கூறினார்.

