காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம்

காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம்

2 mins read
6729796a-eea8-4ecb-9941-3929c7c2c727
காவல்துறையினர் இப்போது இருப்பதைவிட மேலும் துரிதமாகச் செயல்பட நாளை முதல் அவர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப் படம் -

புத்­தாண்டு முதல் காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்­குக் கூடு­தல் அதி­கா­ரம் வழங்­கப்­ப­டு­கிறது.

அவற்­றைக் கொண்டு அவர்­கள் இன்­னும் தீவி­ர­மாக நட­வ­டிக்­கை­கள் எடுக்­க­லாம். அது­மட்­டு­மல்­லாது, பொது­மக்­க­ளுக்கு இன்­னும் துரி­தமா­ன­மு­றை­யில் பாது­காப்பு வழங்­க­லாம்.

மருத்­துவ அவ­ச­ர­நிலை ஏற்­படும் இடங்­களில் அனு­ம­திக்­கா­கக் காத்­தி­ருக்­கா­மல் உடனே உள்ளே நுழைந்து உதவ அவர்­க­ளுக்கு அதி­கா­ரம் வழங்­கப்­ப­டு­கிறது.

காயம், அகால மர­ணம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து பொது­மக்­க­ளைப் பாது­காக்க இது உத­வும்.

தற்­போது நடப்­பில் உள்ள சட்­டத்­தின்­படி ஒரு­வர் துன்பப்படுவது தெரிந்­தா­லும் குற்­றம் நிக­ழ­வில்லை என்­றால் காவல்­து­றை­யி­னர் கைது நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முடி­யாது. அத்­து­டன், பிரச்­சினை ஏற்­பட்­ட­தா­கக் கூறப்­படும் இடத்­துக்­குள் அனு­மதி இன்றி உள்ளே நுழைய முடி­யாது.

முழு­நேர தேசிய சேவை­யா­ளர்­கள், தொண்­டூ­ழிய அடிப்­ப­டை­யில் செயல்­படும் சிறப்­புக் காவல் அதி­கா­ரி­கள் உட்­பட அனைத்து சிறப்­புக் காவல் அதி­கா­ரி­க­ளுக்­கும் இந்­தக் கூடு­தல் அதி­கா­ரம் நீட்­டிக்­கப்­படும்.

இவர்­க­ளுக்­குத் தற்­போது விசா­ரணை நடத்த மட்­டுமே அதி­கா­ரம் உள்­ளது, கைது செய்­யும் அதி­கா­ரம் கிடை­யாது.

புதிய சட்­டத்­தின்­கீழ் இந்த நிலை மாறும்.

வர்த்­தக, நிதி தொடர்­பான குற்­றங்­கள் குறித்து விசா­ரணை நடத்­தும் வர்த்­தக விவ­கார அதி­கா­ரி­

க­ளுக்­கும் கூடு­தல் அதி­கா­ரம் வழங்­கப்­ப­டு­கிறது.

இதன்­மூ­லம் திரு­டப்­பட்ட பொருள்­களை வைத்­தி­ருப்­ப­வர்­களை அவர்­கள் கைது செய்­ய­லாம்.

தற்­போ­தைய நிலை­யில் இந்த அதி­கா­ரி­க­ளால் விசா­ரணை மட்­டுமே நடத்த முடி­யும்.

இந்­தச் சட்­டத் திருத்­தங்­கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி­யன்று நாடா­ளு­மன்­றத்­தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.

புதிய சட்­டத்­தின்­கீழ் மக்­கள் போக்­கு­வ­ரத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் காவல்­து­றை­யி­னர் தடுப்­பு­களை அமைக்­க­லாம்.

மேலும், அத்­த­கைய தடுப்­பு­

க­ளைக் கடந்து செல்­லக்­கூ­டாது என்ற காவல்­துறை அதி­கா­ரி­க­ளின் உத்­த­ரவை மீறு­வோர் கைது செய்­யப்­ப­ட­லாம்.

சோதனை நடத்­தும் நோக்­கில் சாலை­களில் அமைக்­கப்­படும் தடுப்பு­களில் நிறுத்­தா­மல் தொடர்ந்து செல்­லும் வாகன ஓட்­டு­நர்­க­ளுக்கு எதி­ரான தண்­டனை மேலும் கடு­மை­யாக்­கப்­ப­டு­கிறது.

சாலை தடுப்­பு­களில் நிறுத்­தா­மல் தொடர்ந்து செல்­வது மட்­டு­மின்றி அது­தொ­டர்­பான மற்ற விதி­மீ­றல்­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

அதா­வது, சாலைத் தடுப்­புக்கு முன்பு வாக­னத்தை நிறுத்தி அதி­லி­ருந்து வெளி­யேறி தப்­பிக்க முயற்சி செய்­வது, சாலைத் தடுப்­பைப் பார்த்­த­தும் தப்­பிக்­கும் நோக்­கு­டன் வாக­னத்­தைப் பின்­னோக்­கிச் செலுத்­து­வது, சாலைத் தடுப்­புக்கு முன்பு யூ-டர்ன் செய்து தப்­பிக்க முயல்­வது ஆகிய செயல்­களும் விதி­மீ­றல்­க­ளாக எடுத்­துக்­கொள்­ளப்­படும்.

இக்­குற்­றங்­க­ளுக்­கான தண்­டனை கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளது.

குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் அதி­க­பட்­சம் ஏழாண்டு சிறை, $10,000 அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம்.

சிங்­கப்­பூர் காவல்­து­றை­யின் ஒழுங்கு நட­வ­டிக்கை, நிர்­வாக, மனிதவள செயல்­மு­றை­களை வலுப்­ப­டுத்­தும் மாற்­றங்­களும் நாளை­யி­லி­ருந்து நடப்­புக்கு வரும்.

சிங்­கப்­பூர் காவல்­து­றைக்­கா­கச் செயல்­படும் சிறப்பு காவல் அதி­கா­ரி­களும் சிவி­லி­யன் அதி­கா­ரி­களும் காவல்­துறை சங்­கங்­களில் சேர­லாம். காவல்­துறை சீரு­டை­கள், சின்­னங்­க­ளின் விற்­ப­னை­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் முறை­க­ளைச் சீர்ப்­

ப­டுத்­து­தல் போன்ற மாற்­றங்­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

மீத­முள்ள சட்­டத் திருத்­தங்­கள் இன்­னொரு நாள் நடப்­புக்கு வரும் என்று உள்­துறை அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இவை குறித்து கூடிய விரை­வில் விவ­ரங்­கள் வெளி­யி­டப்­படும் என்று அது கூறி­யது.

துணைக் காவல் படை­கள் மீதான கட்­டுப்­பாட்டை வலுப்­ப­டுத்­து­வது போன்ற மாற்­றங்­கள் நடப்­புக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­

ப­டு­கிறது.