சட்டத்துக்குப் புறம்பான பணம் அனுப்பும் சேவையில் ஈடுபட்டதாக இருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
$5.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை அவர்கள் அனுப்பியதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூரிலிருந்து மியன்
மாருக்கு அந்தத் தொகை அனுப்பப்பட்டதாக அறியப்படுகிறது.
இந்தச் சட்டவிரோத பணம் அனுப்பும் சேவை மூலம் சிங்கப்பூர் நிரந்தரவாசியான 44 வயது திரி நயிங்கும் சிங்கப்பூரரான 65 வயது யு சுன் டின்ட்டும் $26,000க்கும் அதிகமாகப் பெற்றதாகக் கூறப்
படுகிறது.
நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள பெனின்சுலா பிளாசாவில் இருக்கும் லியோ இன்டர்நேஷனல் டிரேடிங் நிறுவனத்திலிருந்து இந்த இருவரும் சட்டவிரோத பணம் அனுப்பும் சேவையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

