தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

3,200 அட்டைப்பெட்டிகளில் கள்ள சிகரெட்டுகள்: கைதான நால்வரில் ஒருவருக்கு 16 வயது

1 mins read
b6008a21-7ed4-499b-ab37-2ee4d4f73c50
கைது செய்யப்பட்டவர்கள் அருகே பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள். படம்: கவ்.எஸ்ஜி -

தொழிற்­சாலை வளா­கம் ஒன்­றில் அதி­கா­ரி­கள் நடத்­திய அதி­ர­டிச் சோத­னை­யில் வரி செலுத்­தப்­ப­டாத சிக­ரெட்­டு­க­ளைக் கொண்ட 3,200க்கும் மேற்­பட்ட அட்­டைப்­பெட்டி­கள் சிக்­கின.

கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று லோயாங் டிரைவ் அருகே அமைந்­துள்ள அந்த வளா­கத்­தில் சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை அதி­கா­ரி­கள் சோத­னையை மேற்­கொண்­ட­னர்.

மூன்று ஆட­வர்­களும் 16 வயது சிறு­வ­னும் இந்த அம­லாக்க நட­வடிக்­கை­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக நேற்று விடுத்த அறிக்­கை­யில் சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை தெரி­வித்­தது.

கட்­டில் சட்­டங்­களில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சிக­ரெட்­டு­களை ஆட­வர் ஒரு­வர் எடுத்­துப் பைகளில் வைப்­பதை அமலாக்க அதி­கா­ரி­கள் கண்­டனர்.

பறி­மு­தல் செய்­யப்­பட்ட சிக­ரெட்டு­க­ளுக்­குச் செலுத்த வேண்­டிய வரி, கிட்­டத்­தட்ட $298,000 என்று கூறப்­பட்­டது.

நீதி­மன்­றத்­தில் இரு­வர் மீது நேற்று முன்­தி­னம் குற்­றம் சாட்­டப்­பட்­டது. மற்ற இரு­வர் மீதான விசா­ரணை நடந்து வரு­கிறது.