சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆகியவற்றின் அதிகாரிகளின் உதவியுடன் தங்ளின் காவல்துறை பிரிவு அதிகாரிகள் சென்ற மாதம் 24ஆம் தேதியும் 25ஆம் தேதியும் 29 நிலையங்களில் எடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து 131 பேர் விசாரிக்கப்படுகிறார்கள்.
உரிமம் பெற்ற, உரிமம் பெறாத பொது பொழுதுபோக்கு மற்றும் இரவுநேர கேளிக்கை விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
விசாரிக்கப்பட்டு வரும் ஆடவர்களுக்கும் பெண்களுக்கும் வயது 16 முதல் 44 வரை என்று காவல்துறை தெரிவித்தது.
பாதுகாப்பு இடைவெளி நிபந்தனையை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் அவர்கள் விசாரிக்கப்படுகிறார்கள்.
சோஃபியா ரோடு, ரிவர் வேலி ரோடு ஆர்ச்சர்ட் ரோட்டில் செயல்பட்ட விடுதிகள் சோதனைக்கு உள்ளான இடங்களில் அடங்கும்.

