சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம், சரக்குப் போக்குவரத்து அதிகரிப்பால் மீண்டும் உச்சத்தில் பறந்து வருகிறது.
கொள்ளைநோய் காரணமாக உலகம் முழுவதும் விநியோகிப்புச் சங்கிலி பாதிக்கப்பட்டது. இதனால் தேவை அதிகரித்தது. மின்வர்த்தகம் பெருமளவு கூடியது. விமானச் சரக்குப் போக்குவரத்துக்கான தேவையும் அதிகரித்தது.
சாங்கி குழுமம் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி 2021ல் ஜனவரி முதல் நவம்பர் வரையில் விமானச் சரக்குப் போக்குவரத்து 1.76 மில்லியன் டன்னை எட்டியது. கொள்ளைநோய் பரவலுக்கு முந்தைய காலக்கட்டத்தில் 2019ல் அது 1.84 மில்லியன் டன்னாக இருந்தது.
இதில் 96 விழுக்காடு சரக்குப் போக்குவரத்து 2021ல் நடந்துள்ளது.
அதே சமயத்தில் 2020 ஜனவரி முதல் நவம்பர் வரையில் கையாளப்பட்ட 1.4 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில் இது 26 விழுக்காடு அதிகம்.
2019ல் கையாளப்பட்ட சரக்கு களுடன் ஒப்பிடுகையில் 2020 முழு ஆண்டுக்கான சரக்குப் போக்கு வரத்து 1.54 டன்னாக குறைந்தது. 2020ல்தான் கிருமிப் பரவல் உச்சக் கட்டத்தில் இருந்தது. கொள்ளைநோய்க்கு எதிரான தீவிரக் கட்டுப் பாடுகளும் முடக்கங்களும் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்தன. கொள்ளைநோய்க்கு முன்பு இருந்த விமான ஏற்றுமதி, இறக்குதி யைவிட கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையில் அது எட்டு விழுக்காடு அதிகரித்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபரில் 2019ஆம் ஆண்டில் கையாளப்பட்ட சரக்கின் அளவையும் தாண்டிவிட்டதாக சாங்கி விமான நிலையக் குழுமம் தெரிவித்தது.
விமானச் சரக்குப் போக்குவரத் துக்கு ஏற்றுமதி, இறக்குமதி, கப்பல் சரக்குப் போக்குவரத்து ஆகியவை முக்கிய கூறுகளாக உள்ளன.
2021 டிசம்பரின் முதல் வாரத்தில் மட்டும் சாங்கி விமான நிலையத்தில் 1,000 வாரந்திர சரக்கு விமானச் சேவைகள் நடைபெற்றன. இதில் பயணிகளுக்கான விமானங்கள் சரக்கு விமானங்களாக மாற்றப் பட்ட சேவைகளும் அடங்கும்.
எழுபதுக்கும் மேற்பட்ட உலக நகரங்களுக்கு சாங்கி, சரக்குகளைக் கையாண்டுள்ளது.
இது, 2019 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகமாகும்.