தங்குவிடுதி ஒன்றைச் சட்டவிரோதமாக நடத்தியதில் சம்பந்தப்பட்ட கட்டுமான ஊழியரான ரய்ஹான் ஜாஹிர், செவ்வாய்க்கிழமை (ஜனவரி 4) மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். முறையான அனுமதி அட்டை இல்லாமல் வேலை செய்தது, அதிகாரமற்ற வகையில் நிலத்தை மேம்படுத்தியது உள்ளிட்டவை அந்தக் குற்றச்சாட்டுகளில் அடங்கும்.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி, அந்த தங்குவிடுதியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் உயிரிழந்தனர்; வேறு மூவர் காயமுற்றனர்.
அந்த விடுதி நடத்துநர் தீ பாதுகாப்பு பரிசோதனைகளைத் தவறவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பரிசோதனைகளைச் சரியாக செய்திருந்தால், தீவிபத்தைத் தவிர்த்திருக்கலாம்.
தங்குவிடுதி நடத்துநரான நியோ வீ செங், 47, மீது முன்னதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்கு எதிரான நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது.