சிங்கப்பூரின் ஆகப்பெரிய டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ, முற்றிலும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய 400 டாக்சிகளை இவ்வாண்டு அறிமுகம் செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இடம்பெறும் பெரிய அளவிலான மின்சார டாக்சி அறிமுகமாக அது அமையும். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் மின்சார டாக்சி சாலைகளில் சோதிக்கப்பட்டு வந்த நிலையில் அதுகுறித்த பெரிய அறிவிப்பை நேற்று கம்ஃபர்ட் டெல்குரோ வெளியிட்டது.
வரும் 2023ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூர் சாலைகளில் 1,000 மின்சார டாக்சிகளை கம்ஃபர்ட்டெல்குரோ ஓடச்செய்யும் என்று அந்
நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேக்சன் சியா, 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் கூறினார். மின்சார வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தற்போது சரியான நேரம் என தாம் கருதுவதாக அவர் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்