உலகளாவிய பிரச்சினைகளில் உலக நாடுகள் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பதையே அண்மைய ஆண்டுகளாக கொள்ளைநோய் பாடம் கற்பித்துள்ளது என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நடந்த வட்டார எதிர்காலம் பற்றிய வருடாந்திர இரண்டு நாள் கருத்தரங்கில் அவர் பேசினார்.
அப்போது உலக நாடுகளின் ஒன்றுபட்ட ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
"கொவிட்-19 தொற்றிலிருந்து மீள்வது, விநியோகச் சங்கிலிப் பாதிப்பு, பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் கூட்டு நடவடிக்கை மற்றும் உலகளாவிய தீர்வுகள் தேவை என்பது தெளிவாக தெரிகிறது," என்றார் அவர்.
"உலக சுகாதார நிறுவனம் போன்ற உலகளாவிய அமைப்பு களுக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது சவாலாக இருந்தது. இதனால் பலதரப்பு ஒத்துழைப்பு பாதிக்கப்பட்டது. இந்தப்போக்கு அனைத்துலக உறவு களிலும் எதிெராலித்தது," என்று திரு டியோ குறிப்பிட்டார்.
2008ல் நிதி நெருக்கடி ஏற்பட்டபோது பொருளியலை நிலைப்படுத்த 'ஜி20' தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்பட்டனர். அேதபோன்ற ஒத்துழைப்பை கொள்ளைநோய் விவகாரத்தில் பார்க்க முடியவில்லை என்றும் அவர் சொன்னார்.
அமெரிக்க-சீனா உறவு பற்றி பேசிய திரு டியோ, "இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளும் என மற்ற நாடுகள் எதிர்பார்க்கின்றன. ஆனால் தற்போதைய கொள்ளைநோய், இரு நாடு களுக்கு இடையிலான போட்டியை வேகப்படுத்தியுள்ளது.
"இரு வல்லரசு நாடுகளும் சுய நலம் பார்க்காமல் உலகளாவிய தலைமைக்குச் சேர்ந்து செயல்பட்டால் உலகளாவிய சவால்களை நாம் அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
"அதே சமயத்தில் அமெரிக்க, சீனாவின் முயற்சிகளுக்குக் காத்திராமல் சிறிய நாடுகள் பங்காளித்துவ உறவை மேம்படுத்தி உலகளாவிய ஒழுங்கை வடிவமைக்கலாம்," என்று அவர் ஆலோசனை வழங்கினார்.
இதற்கு 11 நாடுகளை உள்ளடக்கிய பசிபிக் நாடுகளுக்கு இடையிலான விரிவான முன்னேற்ற உடன்பாடு, புருணை, சிலி, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒப்பந்தம், 15 நாடுகளை உள்ளடக்கிய வட்டார விரிவான பொருளியல் பங்காளித்துவ உடன்பாடு ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.
காப்புறுதி, தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்குவதில் கூட்டு முதலீடு உட்பட இன்னும் பல துறைகளில் வட்டார நாடுகள் சேர்ந்து செயல்படலாம் என்று மூத்த அமைச்சர் டியோ சி ஹியன் தெரி வித்துள்ளார்.

