தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாற்றான் மகனை துன்புறுத்தியவருக்குச் சிறை

1 mins read
8cac612a-fa5b-4c1b-a83c-75a65138001e
-

தமது மாற்­றான் மகனை அடித்­துத் துன்­பு­றுத்தி காயப்­ப­டுத்­திய ஆட­வ­ருக்கு இரண்டு ஆண்­டு­கள், ஒன்­பது மாதங்­கள் சிறைத் தண்­ட­னை­யும் ஆறு பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

பாதிக்­கப்­பட்ட ஒன்­பது வயது சிறு­வ­னின் அடை­யா­ளத்­தைக் காக்க தண்­டனை விதிக்­கப்­பட்ட ஆட­வ­ரின் பெயரை வெளி­யி­டக்­கூ­டாது என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அந்த 32 வயது ஆட­வர் சிறு­வனை அடித்­த­தால் அச்­சிறு

வனுக்கு பல இடங்­களில் எலும்பு முறி­வு­கள் ஏற்­பட்­டன.

அது­மட்­டு­மல்­லாது, காது

சவ்­வும் கிழிந்­தது.

சிறு­வ­னின் வலது காதில் ஓராண்­டுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்­யப்­பட்­டது தெரிந்­திருந்தும் அந்த ஆட­வர் அதே காதில் அடித்­தார்.

துன்­பு­றுத்­தல் கார­ண­மா­கப் பத்து நாட்­க­ளுக்கு மருத்­து­வ­

ம­னை­யில் தங்கி சிகிச்சை பெறும் நிலை அச்­சி­று­வ­னுக்கு ஏற்­பட்­டது.

இந்­தக் கடு­மை­யான துன்

­பு­றுத்­தல்­கள் கார­ண­மாக சிறு­வன் அதிக அள­வில் பாதிக்­கப்­

பட்­டுள்­ள­தாக அர­சாங்க வழக்­

க­றி­ஞர் கூறி­னார்.