தள்ளுவண்டிகளைத் திரும்பத் தராத மக்கள்

2 mins read
69e17065-7576-42d6-9347-725649217b84
-

பேரங்­கா­டி­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­க­மான பொருள்­களை வாங்­கும்­போது எனும் தள்­ளு­வண்­டி­யைப் பயன்­ப­டுத்­து­வர். முஸ்­தஃபா கடைத்­தொ­குதி, என்­டி­யுசி ஃபேர்பி­ரைஸ், கோல்ட் ஸ்டா­ரேஜ் உள்­ளிட்ட பேரங்­கா­டி­களில் இந்த வசதி உண்டு. சில வேளை­களில் அதி­க­மான பொருள்­களை வாங்­கும் வாடிக்­கை­யா­ளர்­கள் அவற்றை வாங்­கிய பிறகு வீடு வரை தள்­ளு­வண்­டி­யைக் கொண்டு செல்­வ­தும் உண்டு.

சிலர் பொறுப்­பாக அவற்றை சம்­பந்­தப்­பட்ட கடை­யி­டம் ஒப்படைத்து­வி­டு­வர். உதா­ர­ண­மாக, ரிவர்­வேல் கிரெ­சண்­டில் வசிக்­கும் திரு சபேஸ்­டி­யன் சுவா,தனது வீட்­டி­லி­ருந்து மூன்று வீவக புளோக்­கு­க­ளுக்கு அப்­பால் உள்ள ஃபேர்பி­ரைஸ் பேரங்­கா­டி­யில் பொருள்­களை வாங்­கிக் கொண்டு பொது­வாக வீட்­டிற்கு நடந்து வரு­வார்.

சில மாதங்­களுக்கு ஒரு முறை ஐந்து கிலோ­கி­ராம் எடை கொண்ட அரிசி மூட்டை போன்ற பெரிய பொருள்­களை வாங்­கும்­போது தள்ளு­வண்­டி­யில் பொருள்­களை வீட்­டிக்­குக் கொண்டு செல்­வார். அதற்­குப் பிறகு தள்ளுவண்­டி­யைப் பேரங்­கா­டி­யி­டம் ஒப்­ப­டைப்­பார். "தள்­ளுவண்டி நமக்­குச் சொந்­த­மா­ன­தல்ல. அவ்­வப்­போது அதைப் பயன்­ப­டுத்­தத் தேவை­யி­ருக்­கும், அதேவேளை­யில் பொறுப்­பாக திரும்­பக் கொடுக்­க­வேண்­டும்," என்று 54 வயது திரு சுவா குறிப்­பிட்­டார்.

எனி­னும், எல்லா குடி­யி­ருப்­பா­ளர்­களும் இவ­ரைப்போல் யோசிப்­ப­தில்லை. ரிவர்­வேல் கிரசெண்­டின் சாலைக்கு அருகே பல தள்­ளு­வண்­டி­கள் இருந்­ததை சண்டே டைம்ஸ் கண்­டது.

பெரிய பிரச்­சி­னை­யாக உரு­வெடுத்­துள்ள இதைக் கருத்­தில் கொண்டு 'எம்­எஸ்ஓ' எனும் நக­ராட்சி சேவை­கள் அலு­வ­ல­கம், கடை­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கா­மல் பொது இடங்­களில் விடப்­படும் தள்ளு­வண்­டி­களை அடை­யா­ளம் காண்­ப­தற்­கான 'ஸ்பாட் அபேண்­டண்ட் டிரா­லிஸ்' அம்­சத்தை 'ஒன்­சர்­விஸ்' எனும் தனது செய­லி­யில் சேர்த்­துள்­ளது. இதில் ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், முஸ்­தஃபா, ஜயன்ட், கோல்ட் ஸ்ரடோரேஜ் உள்­ளிட்­டவை இடம்­பெற்­றுள்­ளன.

தேசிய வளர்ச்சி அமைச்­சின்­கீழ் செயல்­படும் நக­ராட்சிச் சேவை­கள் அலு­வ­ல­கம், தனது செய­லி­யின் வாயி­லாக வெளியே கிடக்­கும் தள்ளு­வண்­டி­க­ளின் தொடர்­பில் சென்ற ஆண்டு 6,559 புகார்­கள் வந்­த­தா­கத் தெரி­வித்­தது. செய­லி­யின் மூலம் குடி­மக்­கள் நக­ராட்சி விவ­கா­ரங்­கள் குறித்து அதி­கா­ரி­க­ளைத் தொடர்­பு­கொள்­ள­லாம்.

2019ஆம் ஆண்டு 5,429 புகார்­கள் கொடுக்­கப்­பட்­டன. 2020ல் மக்­கள் 6,662 புகார்­க­ளைத் தந்­த­னர். கூடு­த­லா­னோர் செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­த­தால் புகார்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­தாக தேசிய வளர்ச்சி அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

திரும்­பத் தரப்­ப­டாத தள்­ளு­வண்­டி­க­ளால் பேரங்­கா­டி­க­ளுக்கு நிதி இழப்பு ஏற்­ப­டு­கிறது. தள்­ளு­வண்­டி­க­ளைத் திரும்­பப் பெறு­வது, அவற்­றைப் பழு­து­பார்ப்­பது, மாற்­றுத் தள்ளு­வண்­டி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­வது ஆகி­ய­வற்­றுக்கு ஆண்­டு­தோ­றும் சரா­ச­ரி­யாக 150,000 வெள்ளி செல­வா­வ­தாக ஃபேர்பி­ரை­ஸுக்­கான பேச்­சா­ளர் ஒரு­வர் கூறி­னார்.

சென்ற ஆண்டு, நவம்­பர் மாதம் வரை மட்­டுமே திரும்­பப் பெறாத தள்­ளு­வண்­டி­க­ளின் தொடர்­பில் ஃபேர்பி­ரை­ஸுக்கு சுமார் 4,000 புகார்­கள் வந்­தன. 2019, 2020ஆம் ஆண்­டு­களில் புகார்­க­ளின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 3,300ஆகத்­தான் இருந்­தது. இது, தொடர்ந்து இருந்து வரும் ஒரு பிரச்­சி­னை­யைக் கையாள பொது­மக்­க­ளி­டையே போது­மான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, பொறுப்­பு­ணர்வை வளர்ப்­பது ஆகிய அம்­சங்­களே வழி­கள் என்று ஃபேர்பி­ரைஸ் சுட்டி­யது.