முதலாளிகளும் ஊழியர்களும் பொறுப்பேற்க வேண்டும்

முதலாளிகளும் ஊழியர்களும் பொறுப்பேற்க வேண்டும்

2 mins read
597a407e-b3e9-4034-9252-d8f3f269ca12
-

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால், வேலை செய்­வ­தற்­கான நீக்­குப்­போக்­கான பணி ஏற்­பா­டு­களில் முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் முக்­கிய பங்கு வகிக்­கின்­ற­னர்.

பணி­யா­ளர்­கள் இது­போன்ற ஏற்­பா­டு­களை பொறுப்­பு­டன் பயன்­படுத்த வேண்­டும். வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும்­போது அவர்­க­ளைத் தொடர்­பு­கொள்­வ­தில் சிர­மங்­கள் இருக்­கக்­கூ­டாது.

முத­லா­ளி­கள் தங்­கள் எதிர்­பார்ப்பு­களை வெளிப்­ப­டை­யா­கத் தெரி­விக்க வேண்­டும். நேருக்கு நேர் சந்­திப்­ப­தற்­குப் பதி­லாக ஊழி­யர்­கள் தங்­கள் வேலை நேரத்தை சிறந்த முறை­யில் நிர்­வ­கிக்க வேண்­டும் என்று மனி­த­வள துணை அமைச்­சர் கான் சியோ ஹுவாங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

அலு­வ­ல­கத்­தில் வேலை செய்­வோ­ரை­யும் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வோ­ரை­யும் மதிப்­பி­டும்­போது அது நியா­ய­மா­ன­தாக இருப்­பதை எவ்­வாறு உறுதி செய்­வது என்று பாசிர் ரிஸ்-பொங்­கோல் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் இயோ வான் லிங் கேட்ட கேள்­விக்கு அமைச்­சர் பதி­ல­ளித்­தார்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் ஏற்­பா­டு­களை சட்­ட­மாக்க அவ­சரப்­படக்கூடாது என்று நேற்று முன்­தினம் மனி­த­வள அமைச்சு கூறிய தற்கு ஒருநாள் கழித்து திரு­வாட்டி கானின் கருத்­து­கள் வெளிவந்­துள்­ளன. இருப்­பி­னும், வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வதே நாள­டை­வில் அதி­க­மா­னோர் விரும்­பும் நடை­முறை­யாக மாறக்­கூ­டும்.

முத­லா­ளி­களும் மனி­த­வள மேல­தி­கா­ரி­களும் எவ்­வாறு நீக்­குப்­போக்­கான பணி ஏற்­பா­டு­களை நியா­ய­மான, நிலை­யான, பய­னுள்ள வகை­யில் செயல்­ப­டுத்த தேவையான வளங்­களை முத்­தரப்­புப் பங்­கா­ளி­கள் வழங்­கி­யி­ருக்­கின்றன என்று நேற்று திரு­வாட்டி கான் சுட்­டி­னார்.

வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வது போன்ற நீக்­குப்­போக்­கான பணி ஏற்­பா­டு­கள், பொரு­ளி­யல் ரீதி­யாக பங்­க­ளிக்­கும் அதே­வே­ளை­யில் பரா­ம­ரிப்­பா­ளர்­க­ள் வீட்­டில் தங்­கள் பங்கை செலுத்­த­வும் உத­வும் என்­ப­தை­யும் திரு­மதி கான் வலி­யு­றுத்­தி­னார்.

கட்­ட­ணக் கழி­வு­டன் கூடிய பரா­ம­ரிப்புச் சேவை­கள், மானி­யங்­கள் போன்­றவை முத­லா­ளி­கள் மத்­தி­யில் நீக்­குப்­போக்­கான பணி ஏற்­பா­டு­களை பர­வ­லாக ஏற்­றுக்­கொள்­வதை ஊக்­கு­விக்­கிறது.

அத்­து­டன் பரா­ம­ரிப்­பா­ளர்­கள் உட்­பட அனைத்து சிங்­கப்­பூ­ரர்­களும் தங்­கள் ஓய்­வு­க்கா­லத்­துக்கு போது­மான சேமிப்பை உரு­வாக்க உத­வும் நட­வ­டிக்­கை­கள் போன்ற பல வழி­களில் அர­சாங்­கம் ஆத­ரவு வழங்கு ­கிறது என்று அமைச்­சர் விளக்கி னார்.

சிங்­கப்­பூ­ரில் உள்ள பெண்­களின் முழு­நேர வேலை வாய்ப்பு விகி­தம் கடந்த பத்­தாண்­டு­களில் 65 விழுக்­கா­டாக உயர்ந்­துள்­ளது.

ஆனால் தங்களுக்கு இருக்கும் பராமரிப்பு பொறுப்புகள் காரணமாக ஒரு சிறிய அளவிலான பெண் களால் பணியிடங்களில் ஓரளவா கவோ அல்லது முழுமையாகவோ பணிகளில் பங்கேற்க முடியவில்லை என்று திரு­வாட்டி கான் குறிப்­பிட்­டார்.

2020ஆம் ஆண்­டில், இங்கு 25 முதல் 64 வய­துக்­குட்­பட்ட பெண்­களில் 15 விழுக்­காட்­டி­னர் ஊழி­யர் அணியில் சேராமல் இருப்பதற்கு குடும்­பம் தொடர்­பான பொறுப்­பு­களே முக்­கிய கார­ண­ம் என்று கூறினர்.

ஆறு விழுக்­காட்­டி­னர் குடும்­பம் அல்­லது தனிப்­பட்ட பொறுப்­பு­கள் கார­ண­மாக பகு­தி­நேர வேலை செய்­வ­தா­க­வும் கூறி­யுள்­ள­னர் என்­றும் துணை அமைச்­சர் கான் தெரிவித்தார்.

நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளின் வெற்றியை உறுதி செய்தல்