பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உதவி

பாலியல் மற்றும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் உதவி

2 mins read
bdea40d4-1d29-4dcd-99de-d3d9fbb4ff11
-

குடும்­பம் மற்­றும் பாலி­யல் வன்­முறைக்கு ஆளா­ன­வர்­க­ளைக் கண்­ட­றிந்து ஆத­ர­வ­ளிக்க சமூக சேவை அமைப்­பு­களும் பிற சமூ­கப் பங்­கா­ளி­க­ளுக்­கும் உத­வு­வ­தற்­காக மேலும் பல நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்­டுத் துணை அமைச்­சர் சுன் ஷுவெ­லிங் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

எந்­த­ விதமான வன்­மு­றை­யை­யும் அனு­ப­விக்­கும் அனை­வ­ருக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும் மூன்று குடும்ப வன்­முறை நிபு­ணத்­துவ நிலை­யங்­க­ளின் ஆற்­றல்­க­ளைப் பலப்­ப­டுத்த ஆவன செய்­யப்­படும்.

இது தவிர, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, (MSF) குடும்ப வன்­முறை நிபு­ணத்­துவ நிலை­யங்­க­ளுக்கு உதவி நாடி வரு­வோ­ரின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்­கான வளங்­கள் இருப்­பதை உறுதி செய்­யும் என்­றும் திரு­வாட்டி சுன் கூறி­னார்.

இரண்டு குடும்ப வன்­முறை நிபு­ணத்­துவ நிலை­யங்­க­ளான 'கேர் கார்­னர் புரோ­ஜெக்ட் ஸ்டார்ட்', மற்­றும் 'பேவ் இன்­ட­கி­ரேட்­டட் சர்­விசஸ் ஃபோர் இன்­டி­வி­ஜு­வல்' அண்ட் ஃபேமிலி புரோ­டெக்­‌ஷன் ஸ்பெ­ஷ­லிஸ்ட் சென்­டர்' ஆகி­யவை அனைத்து வித­மான குடும்ப வன்­மு­றை­யில் இருந்து தப்­பி­ய­வர்­களுக்கு ஆலோ­சனை போன்ற விரி­வான சமூக மற்­றும் உணர்ச்சி­பூர்­வ­மான ஆத­ரவை ஏற்­கெனவே வழங்கி வரு­கின்­றன என்று அமைச்­சர் விவ­ரித்­தார்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, மூன்­றா­வது குடும்ப வன்­முறை நிபு­ணத்­துவ நிலை­ய­மான டிரான்ஸ் சேஃப் அமைப்­பு­டன் இணைந்து செயல்­ப­டு­கிறது.

இத­னால் இந்த ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் பாலி­யல் துன்­பு­றுத்­தல் மற்­றும் வன்­மு­றை­யில் இருந்து தப்­பி­ய­வர்­க­ளுக்கு இந்­நிலை­யம் ஆத­ரவு வழங்கமுடி­யும் என்­றும் அவர் மேலும் தெரிவித் தார்.

கல்வி நிறு­வ­னங்­கள், அடித்­தள மற்­றும் சமய அமைப்­பு­கள் உட்­பட பொது, தனி­யார் துறை­க­ளைச் சேர்ந்த 1,100க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­க­ளுக்­கும் தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­கும் கடந்த ஆண்டு குடும்ப வன்­முறை விழிப்­பு­ணர்வு பயிற்சி அளிக்­கப்­பட்­டது என்று திரு­மதி சுன் குறிப்­பிட்­டார்.

சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு, இன்­னும் அதி­க­மான அமைப்­பு­க­ளு­ட­னும் இதர பங்­கா­ளி­க­ளு­ட­னும் தொடர்ந்து பணி­யாற்­றும்.

ஒவ்­வொரு மூன்­றா­வது குடும்ப வன்­முறை நிபு­ணத்­துவ நிலை­யத்­துக்­கும் 'பேவ்' அமைப்­புக்­கும் சிறப்­புப் பயிற்சி பெற்ற நிபு­ணர்­களை அனுப்ப, அமைச்சு ஒரு புதிய முயற்­சியை மேற்­கொண்டு வரு­கிறது.

இது அடுத்த 12 முதல் 24 மாதங்­களில் தொடங்­கும் என்று கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளி­யிட்­டது.

அதிர்ச்சி மற்­றும் மன­க் கவ­லை­க­ளைத் தீர்க்­க­வும், குற்­ற­வாளி­க­ளின் தவ­றான நடத்­தை­யு­டன் தொடர்­பு­டைய அபா­யக் கார­ணி­களைக் கண்­ட­றிந்து நிவர்த்தி செய்­வ­தில் தலை­யி­ட­வும், பிரச்­சி­னை­யி­லி­ருந்து விடு­பட்­ட­வர்­க­ளுக்­கான பாது­காப்­புத் திட்­டத்­தில் ஈடு­பட சமூ­கப் பணி­யா­ளர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­ற­வும் நிபு­ணர்­கள் உத­வு­வார்­கள்.

ஒட்­டு­மொத்­த­மாக, இது மீண்­டும் மீண்­டும் நடக்­கும் வன்­முறை அபா­யத்­தைக் குறைக்க உத­வும் என்று அமைச்­சர் சுன் கூறி­னார்.

குடும்ப வன்­முறை அறிக்­கைக்­கான பணிக்­கு­ழு­வின்­படி, 2020 நிதி­யாண்­டில் இது­போன்ற சம்­ப­வங்­க­ளைக் கையாள்­வ­தில் நிபு­ணத்­து­வம் பெற்ற நிலை­யங்­க­ளால் குடும்ப வன்­முறை குறித்து 4,574 விசா­ர­ணை­கள் இடம்பெற்றன.

இது இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு இருந்த 2,906 புகார்­க­ளை­விட 57 விழுக்­காடு அதி­க­மா­கும்.

இந்த நிலை­யங்­கள் கையாண்ட உண்­மை­ச் சம்­ப­வங்­கள் 2020 நிதி­யாண்­டு­டன் ஒப்­பு­நோக்க 25 விழுக் காடு அதி­க­ரித்து 1,103 சம்­ப­வங்­கள் ஆனது.