புதிதாக 438 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

புதிதாக 438 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

1 mins read
efcc7eba-108f-45d8-b02a-26051915e515
-

சிங்­கப்­பூ­ரில் புதிதாக 438 பேர் ஓமிக்­ரான் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு செவ்­வாய்க்­கி­ழமை அறி­வித்­தது. இதற்கு முந்திய நாள் இந்த எண்­ணிக்கை 389ஆக இருந்­தது.

438 பேரில் 159 பேர் உள்­ளூர் அள­வில் பாதிக்­கப்­பட்­ட­னர். எஞ்­சிய 279 பேர் வெளி­நாடு களிலிருந்து சிங்­கப்­பூர் வந்­த­வர்­கள். ஒட்­டு­மொத்­த­மாக, சிங்­கப்­பூ­ரில் செவ்­வாய்க்­கி­ழமை புதி­தாக 846 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. திங்­கட்­கி­ழமை இது 750ஆக இருந்­தது.

தொற்று உறுதி செய்­யப்­பட்ட அந்த 846 பேரில் 446 பேர் உள்­ளூர் அள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். எஞ்­சிய 400 பேர் வெளி­நாடுகளில் இருந்து வந்­த­வர்­கள். வாராந்­திர கொவிட்-19 தொற்று விகி­தம் செவ்­வாய்க்­கி­ழமை 1.71ஆக சற்று குறைந்­தது. மருத்­து­வ­ம­னை­களில் 165 கொவிட்-19 நோயா­ளி­கள் உள்­ள­னர். தீவிர சிகிச்­சைப் பிரி­வில் உள்ளோர் விகி­தம் 51.1 விழுக்­கா­டாக இருந்­தது. 17 பேருக்கு செயற்கை உயிர்­வாயு தேவைப்­

ப­டு­கிறது.