கொவிட்-19 விதியை மீறியதாக கேஎஃப்சி மீது குற்றச்சாட்டு

கொவிட்-19 விதியை மீறியதாக கேஎஃப்சி மீது குற்றச்சாட்டு

1 mins read
1d0278ee-53a1-4282-a93d-d3b105a59fe1
-

கொவிட்-19 தொடர்­பான இரு விதி­மு­றை­களை மீறி­ய­தாக கெண்­டக்கி ஃபிரைட் சிக்­கன் (கேஎ­ஃப்சி) நிர்­வா­கத்­தின் மீது நேற்று நீதி­மன்­றத்­தில் குற்­றம் சுமத்­தப்­பட்­டது.

ஃபார் ஈஸ்ட் பிளா­சா­வில் உள்ள கேஎ­ஃப்சி கடை­யில் கடந்த ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இரவு 9.45 மணி­ய­ள­வில் கொவிட்-19 பரி­சோ­தனை செய்­யா­மல் நான்கு வாடிக்­கை­யா­ளர்­களை உள்ளே அனு­ம­தித்­த­தா­கத் தெரியவந்­தது.

சில்­லறை உணவு, பான வர்த்­த­கத்­திற்கு உரி­மம் அளிக்­கப்­பட்ட அந்­தக் கடை வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் கொவிட்-19 அறி­கு­றி­கள் உள்­ள­னவா என்­ப­தைச் சோதித்­த­றி­யும் நடை

­மு­றை­க­ளைப் பின்­பற்றி இருக்க வேண்­டும் என குற்­றச்­சாட்டு ஆவ­ணங்­களில் குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது.

அந்த நான்கு வாடிக்­கை­

யா­ளர்­களும் இரண்டு இரண்டு பேர் கொண்ட குழுக்­க­ளாக இருக்­கி­றார்­களா என்­பதை உறு­தி­செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­யை­யும் அந்­தக் கடை மேற்­கொள்­ள­வில்லை.

இரு­வ­ருக்கு மேல் சேர்ந்து உண்ண அப்­போது அனு­மதி இல்லை.

முகம்­மது ஆரி­ஃபின் சாஹ்­டன், ஷெஸெல் சிலா­மட், நைலா முகம்­மது கமால் மற்­றும் முகம்­மது ஹிதா­யத் ரஹ்­மத் என்­போரே அந்த நான்கு வாடிக்­கை­யா­ளர்­கள்.

கேஎ­ஃப்­சி நிறுவனத்தைப் பிர­தி­நி­தித்து ஜோன­தன் லியு தியோங் சூ என்­ப­வர் குற்­றச்­சாட்டு ஆவ­ணங்­ க­ளைப் பெற்­றுக்கொண்­டார்.

சட்ட ஆலோ­சனை பெற அவகா­சம் வேண்­டும் என்­ப­தால் வழக்கை ஒரு­வா­ரத்­திற்­கு தள்ளி­ வைக்­கு­மாறு அவர் நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக்கொண்­டார். அதற்­கி­ணங்க ஜன­வரி 21ஆம் தேதிக்கு வழக்கு தள்ளிவைக்­கப்­பட்டு உள்­ளது.

கொவிட்-19 விதிகளை மீறு வோருக்கு ஆறு மாதம்வரையி லான சிறைத் தண்டனை, $10,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.