'ஓ' நிலை எனப்படும் ஜிசிஇ சாதா ரண நிலைத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டதில் 85.6 விழுக்காட்டு மாணவர்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தேர்ச்சிகளைப் பெற்றுள்ளனர்.
2020ஆம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் 85.4 விழுக்காட்டு தேர்ச்சியைக் காட்டிலும் இது சற்று அதிகம். கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக மாணவர்கள் தங்களது வகுப்பறைகளி லேயே நேற்று முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.
2021ஆம் ஆண்டு 23,555 மாணவர்கள் 'ஓ' நிலை தேர்வு எழுதியதாக கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் நேற்று கூட்டறிக்கையில் தெரிவித்தன.
இவர்களில் கிட்டத்தட்ட அனை வரும், அல்லது 99.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு பாடத்திலும் 96.4 விழுக்காட்டினர் குறைந்த பட்சம் மூன்று பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கொவிட்-19 சூழலுக்கு இடையில் மாணவர்கள் வெளிக்காட்டிய செயல்திறன் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் வகை யில் அமைந்துள்ளது என அறிக்கை குறிப்பிட்டது.
தொடக்கக் கல்லூரி, மில்லெ னியா கல்விக்கழகம், பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழில் கல்விக் கழகம் ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது 'ஓ' நிலை முடிவு
களைப் பயன்படுத்தி நேரடிச் சேர்க்கை நடவடிக்கை வாயிலாக விண்ணப்பிக்கலாம். அதற்கான பதிவு நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொடங்கியது. வரும் திங்கட்கிழமை மாலை 4 மணி வரை பதிவு செய்துகொள்ளலாம்.
சுவிஸ் காட்டேஜ் உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த ருஷில் ஸ்ரீநாத், அனைத்துப் பாடங் களிலும் உச்சபட்ச தேர்ச்சியான 'ஏ1' மதிப்பெண்ணைப் பெற்றது குறித்து மிகவும் பூரிப்படைவதாகத் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"தேர்வு எழுதும்போது நாம் விழிப்புடனும் நிதானத்துடனும் இருக்கவேண்டும். மனப்பாடப் பயிற்சியும் அவசியம் என்றாலும் இவற்றை அளவாக செய்து நமக்கு சோர்வு வராதபடி பார்த்துக்கொள்ளவேண்டும்," என்று வருங்காலத்தில் மருத்துவர் ஆக விரும்பும் ருஷில் கூறினார்.
கணக்குப் பாடத்தின் தொடக்கத்தில் சராசரி நிலை மதிப்பெண்
களைப் பெற்று இறுதியில் சாதாரண நிலை தேர்வில் சிறப்புத் தேர்ச்சி வாங்கியது குறித்து மகிழ்ச்சி அடைந்ததாக அதே பள்ளியைச் சேர்ந்த பாஸ்கர் ஸ்ருதி, 16, தெரிவித்தார்.
உயர்நிலை 1ல் வழக்கநிலை ஏட்டுக்கல்வி மாணவராக இருந்த ஸ்ருதி, கடுமையாக உழைத்து விரைவுநிலைக்கு மாறினார். "விரைவு நிலை மாணவியின் தரம் எனக்கு உள்ளதாக நான் நம்பினேன். நம்பிக்கையுடன் செயல் பட்டேன்," என்று வர்த்த ஆய்வாளராக வருங்காலத்தில் இருக்க விரும்பும் ஸ்ருதி கூறினார்.
இரு மாணவர்களுமே பாடத்தில் ஏற்படும் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்ள முன்வந்ததாக இவர்களின் தமிழ் ஆசிரியர் திரு அப்துல் நசீர், 56, தெரிவித்தார்.
கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்

