இடைக்காலப் பணிமாற்றத்தில் ஈடுபட விரும்பி, முன்பின் அனுபவம் இல்லாத துறைக்கு மாறத் தயாராக இருப்போருக்கு தொழில்நுட்பத் துறையில் பல வாய்ப்புகள் இருப்பதாக துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.
தேவை அதிகம் உள்ள மின்னிலக்கத் திறன்களை மேலும் 5,000 சிங்கப்பூரர்கள் கற்றுக்கொள்ள ஏதுவாகத் தொழில்நுட்ப ஜாம்பவானான கூகல் நிறுவனம் உபகாரச்சம்பளத் திட்டம் ஒன்றை அறி
முகப்படுத்தியுள்ளது.
திட்டத்தின் அறிமுக விழாவில் திரு ஹெங் நேற்று கலந்துகொண்டு பேசினார். கொவிட்-19 நெருக்கடி நிலையால் மின்னிலக்கமயமாதல் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால் சில தொழில்களும் வேலைகளும் தடைப்படும் என்று திரு ஹெங் கூறினார்.
இருப்பினும், புதிய துறைகளும் வேலைகளும் உருவாகும் என்று பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் தெரிவித்தார்.
"காலப்போக்கில் தொழில்நுட்ப மேம்பாட்டின் காரணமாகக் கூடுத லான, மேலும் சிறப்பான வேலைகள் உருவாகும் என நான் நம்புகிறேன்," என்றார் துணைப் பிரதமர் ஹெங். கூகலின் உபகாரச்சம்பளத் திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்படும் பயிற்சிகள் இணையம் மூலம் நடத்தப்படுகின்றன. கூகலைச் சேர்ந்த நிபுணர்கள் அவற்றை உருவாக்கியுள்ளன. ஒவ்வொரு பயிற்சியும் மூன்று மாதங்
களிலிருந்து ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். பயிற்சிகளை முடிப்போருக்கு கூகல் வாழ்க்கைத்தொழில் சான்றிதழ் வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப ஆதரவு, திட்ட நிர்வாகம், தரவுப் பகுப்பாய்வு, பயனீட்டாளர் அனுபவ வடிவமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளுக்கு உபகாரச்சம்பளத்தைப் பயன்படுத்தலாம். உபகாரச்சம்பளங்களின் மொத்த மதிப்பு $3 மில்லியன்.
கூகலின் உபகாரச்சம்பளத் திட்டத்தின் அறிமுக விழாவில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் (இடது)
கலந்துகொண்டார்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

