தாதியாகச் சேவையாற்றிய 30 வயது நூர் ஃபடில்லா ஜூபிர், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிங்கப்பூர் ஆயுதப் படைகளில் இணைந்தார். அவர் தற்போது ராணுவ மருத்துவ நிபுணராகப் பணிபுரிகிறார்.
இதற்கு முன்பு ஐந்து ஆண்டு களுக்கு அவர் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் தொண்டூழியப் பிரிவில் இணைந்து முக்கிய இடங்களில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டார். அந்த அனுபம் அவரை ஆயுதப் படைகளில் இணைய வைத்துள்ளது.
22வது ராணுவ நிபுணத்துவ நியமனச் சடங்கில் மூத்த ராணுவ நிபுணர்களாக நேற்று நியமிக்கப்பட்ட 97 ஆயுதப் படைகள் அதிகாரிகளில் ஃபடில்லாவும் ஒருவர்.

