பேத்தியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியவருக்குச் சிறை

1 mins read
0ee8c388-0d84-4056-860b-bb535bb6668f
-

பேத்­தியைப் பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­திய 65 வயது முதி­ய­

வ­ருக்கு 14 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை, 18 பிரம்­ப­டி­கள், $9,400 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டன. முதி­ய­வ­ருக்கு 50 வய­துக்கு மேலா­கி­விட்­ட­தால் அவ­ருக்­குப் பிரம்­படி கொடுக்க முடி­யாது. எனவே, அதற்­குப் பதி­லாக அவ­ருக்­குக் கூடு­த­லாக ஒன்­பது மாதச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

பாதிக்­கப்­பட்ட 6 வயது சிறுமி­ யின் அடை­யா­ளத்­தைக் காக்க முதி­ய­வ­ரின் பெயரை வெளி­

யி­டக்­கூ­டாது என்று நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

2015ஆம் ஆண்­டுக்­கும் 2017ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் தமது பேத்­தியை அந்த முதி­ய­வர் தொடர்ந்து பல­முறை பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

2015ஆம் ஆண்­டில் அச்­சி­று­மி­ யி­டம் அந்த முதி­ய­வர் தகாத முறை­யில் நடந்­து­கொண்­ட­போது உற­வுக்­கா­ரர் ஒரு­வர் அவ­ரைக் கையும் கள­வு­மா­கப் பிடித்­தார். பாதிக்­கப்­பட்ட சிறு­மி­யின் தாயா­ரி­டம் நடந்­த­தைப் பற்றி அவர் தெரி­வித்­தார்.

ஆனால் இந்­தப் பாலி­யல் துன்­பு­றுத்­தல் விவ­கா­ரம் ஏறத்­தாழ இரண்டு ஆண்­டு­கள் கழித்­துத்­தான் வெளிச்­சத்­துக்கு வந்­தது.

சிறு­நீர் கழிக்­கும்­போது வலி ஏற்­ப­டு­கிறது என்று சிறுமி முறை­யிட்­டதை அடுத்து அவ­ரது தாயார் அவரை கேகே மக­ளிர், சிறார் மருத்­து­வ­ம­னைக்­கு அழைத்துச் சென்­றார். சிறுமி பாலி­யல் ரீதி­யா­கத் துன்­பு­றுத்­தப்­பட்­டது 2017ஆம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் 24ஆம் தேதி­யன்று தெரி­ய­வந்­தது.

அந்த முதி­ய­வர் மறு­நாள் கைது செய்­யப்­பட்­டார். தீர்ப்பை எதிர்த்து முதி­ய­வர் மேல்­மு­றை­யீடு செய்­யப்­போ­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.