முகக்கவசம் அணியாததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

முகக்கவசம் அணியாததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

1 mins read
593f2687-5fb8-428e-b34d-db679828b3e3
-

சிங்­கப்­பூ­ரில் பல்­வேறு இடங்­களில் முகக்­க­வ­சம் இல்­லா­மல் இருந்­த­தற்­காக பிரிட்­ட­னைச் சேர்ந்த மொக்­ரிட்ஜ் ஃபிலிப் ரிச்­சர்ட் மீது கடந்த மாதம் குற்­றம் சுமத்­தப்­

ப­டு­வ­தாக இருந்­தது. ஆனால் குற்­றச்­சாட்டு பதி­வா­கிய நாளன்று அவர் நீதி­மன்­றத்­துக்­குச் செல்­ல­வில்லை.

இதை­ய­டுத்து, அவ­ருக்கு எதி­ராக நேற்று முன்­தி­னம் கைது ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது. நேற்று 54 வயது மொக்­ரிட்ஜ் தடுத்­து­வைக்­கப்­பட்டு காணொளி மூலம் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப் ­ப­டுத்­தப்­பட்­டார்.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களை மீறி­யது தொடர்­பாக அவர் மீது மூன்று குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கின. 2020ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 26ஆம் தேதி­யன்று இரவு 10.15 மணி அள­வில் செங்­காங் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லும் 2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 19ஆம் தேதி­யன்று இரவு 10.50 மணி அள­வில் சிராங்­கூன் எம்­ஆர்டி நிலை­யத்­தி­லும் அவர் முகக்­

க­வ­சம் அணி­யா­மல் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

கடந்த ஆண்டு மே மாதம் 16ஆம் தேதி­யன்று இரவு 8.50 மணி அள­வில் 180 கிச்­ச­னர் சாலை­யில் மொக்­ரிட்ஜ் முகக்­

க­வ­சம் அணி­யா­மல் இருந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூர் நிரந்­த­ரவா­சி­யான மொக்­ரிட்ஜ், நேற்று தடுப்­புக் காவ­லில் வைக்­கப்­பட்ட இடத்­தில் முகக்­க­வசம் அணிந்­தி­ருந்­தார்.

இந்த வழக்கு இம்­மா­தம் 19ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.