'ஹைஃபன்ஸ் ஃபார்மா' மருந்து தயாரிப்பு நிறுவனம் சிங்கப்பூரில் முதல் மின்னிலக்க மருந்துக் கடையைத் தொடங்கி உள்ளது.
சுகாதார அறிவியல் ஆணையத்திடம் அது பதியப்பட்டு உள்ளது. 'வெல்அவே' எனப்படும் அந்த மருந்துக் கடை மின்னிலக்கத் தளமாகச் செயல்படும்.
அதில் பதிந்துகொண்டு இருக்கும் மருத்துவர்கள், மின்னிலக்க வழியாக நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். மூன்றே மணி நேரத்தில் மருந்து நோயாளியின் வீட்டுக்கு வரும்.
இந்த மின்னிலக்கச் சேவை நோயாளிகளுக்கு இலவசமாக கிடைக்கும். அதைப் பயன்படுத்தும் மருத்துவர்கள் பெயர் அளவிலான ஒரு கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
வெல்அவே மருந்துக் கடைக் கான உரிமத்தை 2021 ஜனவரியில் ஆணையம் வழங்கியது.
இந்த ஆண்டு முடிவில் 1,000 மருந்தகங்கள் இந்த மின்னிலக்கச் சேவையில் சேர்ந்துகொள்ளும் என்றும் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் அன்றாடம் ஏறக்குறைய 30 நோயாளிகளுக்கு அனுப்பப்படும் என்றும் இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.

