சிங்கப்பூரில் கிழக்குப் பகுதியில் வசிப்போர் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் ஏதோ பொசுங்குவது போல் வாடை வந்ததாகத் தெரிவித்தனர்.
ஆனால் அந்தப் பகுதியில் வெப்பம் காரணமாக புதர் தீ மூண்டதாகவோ தொழிற்சாலைகளில் விபத்து நிகழ்ந்ததாகவோ தெரியவில்லை என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
புதன்கிழமை பிற்பகலுக்குப் பிறகு யாரும் அதுபோன்ற புகார் எதையும் தெரிவிக்கவில்லை என்றது வாரியம். இருந்தாலும் சூழ்நிலையைத் தான் தொடர்ந்து கண்காணித்து வரப்போவதாகவும் அது கூறியது.
அந்த வாடையை ஏற்படுத்தக்கூடிய தொழில்துறை விபத்து எதுவும் அந்தப் பகுதியில் நிகழவில்லை என்பது இந்த வாரியம் நடத்திய சோதனைகள் மூலம் தெரியவந்தது.
கிழக்குப் பகுதியில் புதர் தீ பற்றி தகவல் இல்லை என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

